உலகின் பல நாடுகளைப் பாதித்து வரும் எல் நினோ காலநிலை, எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை தொடர்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக, உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் பின்னணியில், நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக சிறிய குளங்கள் முதல் பாரிய நீர்த்தேக்கங்கள் வரையிலான பல நீர்நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், விவசாய நடவடிக்கைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பயிர்கள் அழிவடையும் அபாயமும், குடிநீர் உள்ளிட்ட நீராதாரங்கள் வற்றும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ராவணா எல்ல நீர்வீழ்ச்சியிலும் நீர்வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது.
நீர் பற்றாக்குறையால் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கால்நடைகளுக்குத் தேவையான புல் மற்றும் நீர் கிடைக்காததால் பால் உற்பத்தியாளர்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, எல் நினோ தாக்கத்தால் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை தொடர்வதற்கான சாத்தியம் சுமார் நூறு சதவீதத்திற்கு அண்மித்துள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறான மிகத் துல்லியமான முன்னறிவிப்பு ஒன்று வெளியிடப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், உலக வானிலை அமைப்பின் ஐம்பது ஆண்டுகால வரலாற்றில், அத்தகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்படுவதும் இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பமண்டல பசுபிக் பெருங்கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக உருவாகும் எல் நினோ, எதிர்வரும் மாதங்களில் மேலும் வலுவடைந்து, இந்த ஆண்டின் பிற்பகுதியில் உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூமி முன்னெப்போதும் இல்லாத வகையிலான பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலைக்குள் நுழைந்து வருவதாகவும், கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் உலகளாவிய வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆபத்தான காலநிலை நிலைமை உருவாகி வருவதாகவும் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
இதன் பின்னணியில், நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக சிறிய குளங்கள் முதல் பாரிய நீர்த்தேக்கங்கள் வரையிலான பல நீர்நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், விவசாய நடவடிக்கைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பயிர்கள் அழிவடையும் அபாயமும், குடிநீர் உள்ளிட்ட நீராதாரங்கள் வற்றும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ராவணா எல்ல நீர்வீழ்ச்சியிலும் நீர்வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது.
நீர் பற்றாக்குறையால் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கால்நடைகளுக்குத் தேவையான புல் மற்றும் நீர் கிடைக்காததால் பால் உற்பத்தியாளர்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, எல் நினோ தாக்கத்தால் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை தொடர்வதற்கான சாத்தியம் சுமார் நூறு சதவீதத்திற்கு அண்மித்துள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறான மிகத் துல்லியமான முன்னறிவிப்பு ஒன்று வெளியிடப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், உலக வானிலை அமைப்பின் ஐம்பது ஆண்டுகால வரலாற்றில், அத்தகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்படுவதும் இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பமண்டல பசுபிக் பெருங்கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக உருவாகும் எல் நினோ, எதிர்வரும் மாதங்களில் மேலும் வலுவடைந்து, இந்த ஆண்டின் பிற்பகுதியில் உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூமி முன்னெப்போதும் இல்லாத வகையிலான பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலைக்குள் நுழைந்து வருவதாகவும், கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் உலகளாவிய வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆபத்தான காலநிலை நிலைமை உருவாகி வருவதாகவும் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
Latest News
இந்தியாவில் இதுவரை எங்குமே கண்டறியப்படாத 5 ஓராங்குட்டான் குட்டிகள் ஒடிசாவில் மீட்பு!
Local
09 September 2026
உள்நாட்டு தீவிரவாதிகளால் தான் அதிக ஆபத்து: அமெரிக்கர்களை மிரள வைக்கும் புதிய கருத்துக்கணிப்பு முடிவு!
Local
09 September 2026
நோர்வூட் அஸ்வெசும நிதி மோசடி: இரண்டு பெண் சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
Local
09 September 2026
இணையத்தை கலக்கும் 80s ட்ரெண்ட்: முதலமைச்சர் விஜய்யுடன் நடிகர் சதீஷ் வெளியிட்ட கலக்கல் நிழற்படம்!
Local
09 September 2026
உங்களுக்குப் பிடித்ததை மட்டுமே பார்க்கலாமா? : சமூக வலைத்தளங்களை உலுக்கும் புதிய சட்டம்!
Local
09 September 2026
பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இருதரப்புப் பேச்சுவார்த்தை - ஜனாதிபதியுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு
Local
09 September 2026
ஐநா பொதுச் சபைக் கூட்டம் - நியூயோர்க்கில் உரை நிகழ்த்த உள்ளார் வெளிவிவகார அமைச்சர்
Local
09 September 2026
இஸ்ரேல் – பிரித்தானியா இடையே அதிகரிக்கும் பதற்றம்: தூதரகத்தை மூட உத்தரவு – ஊழியர்களுக்கு எச்சரிக்கை!
Local
09 September 2026
Cognizant நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு அதிரடி தடை : வெளிநாட்டு ஊழியர்களின் 'க்ரீன் கார்ட்' கனவு உடைகிறதா?
Local
09 September 2026
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு - கல்வி முறையில் கடுமையான நெருக்கடி
Local
09 September 2026