உலகின் பல நாடுகளைப் பாதித்து வரும் எல் நினோ காலநிலை, எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை தொடர்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக, உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் பின்னணியில், நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக சிறிய குளங்கள் முதல் பாரிய நீர்த்தேக்கங்கள் வரையிலான பல நீர்நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், விவசாய நடவடிக்கைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பயிர்கள் அழிவடையும் அபாயமும், குடிநீர் உள்ளிட்ட நீராதாரங்கள் வற்றும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ராவணா எல்ல நீர்வீழ்ச்சியிலும் நீர்வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது.
நீர் பற்றாக்குறையால் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கால்நடைகளுக்குத் தேவையான புல் மற்றும் நீர் கிடைக்காததால் பால் உற்பத்தியாளர்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, எல் நினோ தாக்கத்தால் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை தொடர்வதற்கான சாத்தியம் சுமார் நூறு சதவீதத்திற்கு அண்மித்துள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறான மிகத் துல்லியமான முன்னறிவிப்பு ஒன்று வெளியிடப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், உலக வானிலை அமைப்பின் ஐம்பது ஆண்டுகால வரலாற்றில், அத்தகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்படுவதும் இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பமண்டல பசுபிக் பெருங்கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக உருவாகும் எல் நினோ, எதிர்வரும் மாதங்களில் மேலும் வலுவடைந்து, இந்த ஆண்டின் பிற்பகுதியில் உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூமி முன்னெப்போதும் இல்லாத வகையிலான பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலைக்குள் நுழைந்து வருவதாகவும், கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் உலகளாவிய வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆபத்தான காலநிலை நிலைமை உருவாகி வருவதாகவும் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
இதன் பின்னணியில், நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக சிறிய குளங்கள் முதல் பாரிய நீர்த்தேக்கங்கள் வரையிலான பல நீர்நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், விவசாய நடவடிக்கைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பயிர்கள் அழிவடையும் அபாயமும், குடிநீர் உள்ளிட்ட நீராதாரங்கள் வற்றும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ராவணா எல்ல நீர்வீழ்ச்சியிலும் நீர்வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது.
நீர் பற்றாக்குறையால் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கால்நடைகளுக்குத் தேவையான புல் மற்றும் நீர் கிடைக்காததால் பால் உற்பத்தியாளர்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, எல் நினோ தாக்கத்தால் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை தொடர்வதற்கான சாத்தியம் சுமார் நூறு சதவீதத்திற்கு அண்மித்துள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறான மிகத் துல்லியமான முன்னறிவிப்பு ஒன்று வெளியிடப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், உலக வானிலை அமைப்பின் ஐம்பது ஆண்டுகால வரலாற்றில், அத்தகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்படுவதும் இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பமண்டல பசுபிக் பெருங்கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக உருவாகும் எல் நினோ, எதிர்வரும் மாதங்களில் மேலும் வலுவடைந்து, இந்த ஆண்டின் பிற்பகுதியில் உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூமி முன்னெப்போதும் இல்லாத வகையிலான பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலைக்குள் நுழைந்து வருவதாகவும், கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் உலகளாவிய வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆபத்தான காலநிலை நிலைமை உருவாகி வருவதாகவும் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
Latest News
8 முதல் 11 வயதுக் குழந்தைகளுக்கு எடைக் குறைப்பு மருந்துகள் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
Local
05 September 2026
இலங்கைக்கு எதிரான போட்டிகள்: அறிவிக்கப்பட்டது இங்கிலாந்து அணி
Local
05 September 2026
நாமலின் கைதை கண்டித்துள்ள ரணிலின் கட்சி
Local
05 September 2026
அமெரிக்காவில் உலுக்கிய மூன்று குழந்தைகளின் வழக்கு: ரத்துச்செய்யப்பட்ட நீதிமன்ற விசாரணை
Local
05 September 2026
நேபாளம்- திபெத் வெள்ளப்பெருக்கு: சுரங்கப்பாதைகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்
Local
05 September 2026
யுக்ரைன் -ரஷ்ய போர்: அமைதி பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்: ட்ரம்ப் அறிவித்தார்
Local
05 September 2026
டென்னிஸ் மைதானத்தில் கஞ்சா வாசனை: முறையிட்ட வீராங்கனை
Local
05 September 2026
காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் திட்டம்: வெளிப்படையாக நிராகரித்த அமெரிக்கா
Local
05 September 2026
சர்வதேச மாணவர்களுக்கான பிரபலமான பட்டயப் படிப்பை அவுஸ்திரேலியா ரத்து செய்தது.
Local
05 September 2026
சிசுவுடன் உயிரிழந்த இளம் தாய் : ஐஸ் போதை மோகத்தால் பறிபோன இரு உயிர்கள்!
Local
04 September 2026