General04 September 2026

தேயிலைத் தோட்டத்தில் பதற்றம்: சிறுத்தை தாக்கி தோட்டத் தொழிலாளி காயம்!

ஹட்டன் - பொகவந்தலாவை, தெரேசியா தோட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் 56 வயது பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12.35 மணியளவில் தெரேசியா தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

அதே தோட்டத்தைச் சேர்ந்த வேலு புஷ்பராணி என்ற 56 வயதுடைய தோட்டத் தொழிலாளியே சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

அவர் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது, அந்தபகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து தாக்கியுள்ளது.

பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்ட அருகில் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த ஏனைய பெண் தொழிலாளர்கள் சத்தமிட்டதைத் தொடர்ந்து, சிறுத்தை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இந்தநிலையில், சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளான பெண், சக தொழிலாளர்களின் உதவியுடன் பொகவந்தலாவ பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes