ஹட்டன் - பொகவந்தலாவை, தெரேசியா தோட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் 56 வயது பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12.35 மணியளவில் தெரேசியா தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
அதே தோட்டத்தைச் சேர்ந்த வேலு புஷ்பராணி என்ற 56 வயதுடைய தோட்டத் தொழிலாளியே சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
அவர் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது, அந்தபகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து தாக்கியுள்ளது.
பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்ட அருகில் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த ஏனைய பெண் தொழிலாளர்கள் சத்தமிட்டதைத் தொடர்ந்து, சிறுத்தை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இந்தநிலையில், சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளான பெண், சக தொழிலாளர்களின் உதவியுடன் பொகவந்தலாவ பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
Latest News
கல்லூரி மாணவர் சேர்க்கையில் சாதி, மத விபரங்கள் கட்டாயமில்லை – தமிழக அரசு
Local
05 September 2026
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை
Local
05 September 2026
வைபவ் சூர்யவன்ஷியுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கப் போவது யார்? முன்னாள் இந்திய வீரர் அதிரடி யோசனை!
Local
05 September 2026
உடன் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு!
Local
05 September 2026
8 முதல் 11 வயதுக் குழந்தைகளுக்கு எடைக் குறைப்பு மருந்துகள் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
Local
05 September 2026
இலங்கைக்கு எதிரான போட்டிகள்: அறிவிக்கப்பட்டது இங்கிலாந்து அணி
Local
05 September 2026
நாமலின் கைதை கண்டித்துள்ள ரணிலின் கட்சி
Local
05 September 2026
அமெரிக்காவில் உலுக்கிய மூன்று குழந்தைகளின் வழக்கு: ரத்துச்செய்யப்பட்ட நீதிமன்ற விசாரணை
Local
05 September 2026
நேபாளம்- திபெத் வெள்ளப்பெருக்கு: சுரங்கப்பாதைகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்
Local
05 September 2026
யுக்ரைன் -ரஷ்ய போர்: அமைதி பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்: ட்ரம்ப் அறிவித்தார்
Local
05 September 2026