கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் சீன பிரஜையொருவர் கடத்திச் செல்லப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் 54 வயதுடைய சீன பிரஜையொருவர் மாறுவேடத்தில் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேகநபர் செயற்கை தலைமுடியை அணிந்து மாறுவேடத்தில் இருந்த நிலையில், சம்பவம் இடம்பெற்று 43 நாட்களுக்குப் பின்னர் கொழும்பு துறைமுக நகரப் பகுதியிலேயே கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு சீன பிரஜைகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஹலியகொட காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கரதன காவல் கண்காணிப்பு நிலைய அதிகாரிகள் குழுவொன்று, கடந்த ஜூலை 23ஆம் திகதி கெட்டஹெத்த பகுதியை நோக்கிய வீதிக்கு அருகிலுள்ள ரம்புட்டான் தோட்டமொன்றில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட வீட்டுக்குள் இருந்து ஒருவரின் உடலத்தை கண்டெடுத்திருந்தது.
குறித்த உடலம் கற்களால் மூடப்பட்டிருந்ததாகவும், சந்தேகத்திற்கிடமான சொகுசு சிற்றூந்து ஒன்றும் அன்றைய தினம் நுகதண்ட கோவில் அருகிலுள்ள வீதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணைகளில் இது திட்டமிடப்பட்ட சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதுடன், உயிரிழந்தவர் சீன பிரஜை எனவும் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த சீன பிரஜை கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் வெளிநாடு செல்லும் நோக்கில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திற்குச் சென்றிருந்த இரு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவத்துக்குப் பின்னர் சீகிரியா பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த மேலும் இரு சீன பிரஜைகள் கடந்த மாதம் 30ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட 54 வயதுடைய பிரதான சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தடுப்புக்காவல் உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Latest News
தங்க விலையில் மீண்டும் வீழ்ச்சி – இன்றைய விலை நிலவரம்!
Local
07 September 2026
நடிகை கயாடு லோஹருக்கு தமிழில் பிடித்த வார்த்தை இதுதான்!
Local
07 September 2026
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ரஷ்யாவுடனான போர், குளிர்காலம் வரை நீடிக்கும் என ஸெலென்ஸ்கி எதிர்ப்பார்ப்பு
Local
07 September 2026
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு இன்று ஆரம்பம் - இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படும்
Local
07 September 2026
தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது
Local
07 September 2026
தாய்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவித்தல்
Local
07 September 2026
கேப் வெர்டெவின் போகோ தீவில் கோர விபத்து: பெரும்பாலான சிறுவர்கள் உட்பட்ட 25 பேர் பலி
Local
07 September 2026
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
Local
07 September 2026
பொதுப்பணத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் சிறை செல்வது நிச்சயம்- டில்வின் சில்வா எச்சரிக்கை
Local
07 September 2026
நிதிப் பற்றாக்குறையால் முடங்கிய சமூக சமையலறைகள்: காஸாவில் தீவிரப் பட்டினி!
Local
07 September 2026