எல் நினோ (El Niño) தாக்கம் காரணமாக வறண்ட வானிலயால் இலங்கையின் 7 மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளில் மொத்தம் 115,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (5) வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, 34 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 34,608 குடும்பங்களைச் சேர்ந்த 113,354 நபர்களுக்கு தற்போது குடிநீர் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, வறண்ட வானிலையால் மொனராகலை மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 8 பிரதேச செயலகப் பிரிவுகளில் 12,732 குடும்பங்களைச் சேர்ந்த 41,360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தவிர, மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலகப் பிரிவுகளில் 33,394 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 10 பிரதேச செயலகப் பிரிவுகளில் 20,418 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 3 பிரதேச செயலகப் பிரிவுகளில் 11,995 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பொலன்னறுவை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 6,842 பேரில் 5,562 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 1,374 பேரில் 474 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
அனுராதபுரம் மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலகப் பிரிவில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தடையின்றி குடிநீர் வழங்குவதையும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதையும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (5) வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, 34 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 34,608 குடும்பங்களைச் சேர்ந்த 113,354 நபர்களுக்கு தற்போது குடிநீர் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, வறண்ட வானிலையால் மொனராகலை மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 8 பிரதேச செயலகப் பிரிவுகளில் 12,732 குடும்பங்களைச் சேர்ந்த 41,360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தவிர, மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலகப் பிரிவுகளில் 33,394 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 10 பிரதேச செயலகப் பிரிவுகளில் 20,418 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 3 பிரதேச செயலகப் பிரிவுகளில் 11,995 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பொலன்னறுவை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 6,842 பேரில் 5,562 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 1,374 பேரில் 474 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
அனுராதபுரம் மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலகப் பிரிவில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தடையின்றி குடிநீர் வழங்குவதையும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதையும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
Latest News
இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் முன்னேற்றம் வரம்பிற்குட்பட்டதாகவே உள்ளது - ஐநா மனித உரிமைகள் அலுவலகம்
Local
08 September 2026
கொழும்பில் சர்வதேச மரதன் போட்டி - உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு!
Local
08 September 2026
அரச நிறுவனங்களில் டிஜிட்டல் புரட்சி: அனைத்துத் துறைகளிலும் புதிய அலகுகளை நிறுவ அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!
Local
08 September 2026
பலத்த காற்று குறித்த எச்சரிக்கை
Local
08 September 2026
ரவி மோகன் – கெனிஷா புகைப்பிடிக்கும் காட்சியால் பரபரப்பு : கோவா காணொளியால் பரவும் புதிய சர்ச்சை!
Local
08 September 2026
டிட்வா பேரழிவினால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு கடன் நிதியுதவி
Local
08 September 2026
16 மணி நேர நரகம், 21 உயிரிழப்புகள்: வானூர்தி கடத்தலில் தப்பிய 15 வயதுச் சிறுமியின் இன்றைய நெகிழ்ச்சிப் பதிவு!
Local
08 September 2026
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்: நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி
Local
08 September 2026
2030ஆம் ஆண்டுக்குள் விலங்குகளுடன் மனிதர்கள் உரையாட முடியுமா? AI ஆய்வில் புதிய தகவல்
Local
08 September 2026
தனியார் துறைக்கும் இணையவழி தொடருந்து பருவகாலச் சீட்டு - ஒக்டோபர் 1 முதல் வீட்டிலிருந்தே பெறலாம்!
Local
08 September 2026