அரசாங்கத்தால் மட்டும் தனியாக நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும், அதற்கு மக்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
களுத்துறை - புலத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
"வாக்களித்து அரசாங்கத்தை அமைத்ததோடு மக்களின் கடமை முடிந்துவிடவில்லை. இது மக்களின் அரசாங்கமாகும். எனவே, அரசாங்கத்துடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.
கடந்த காலங்களில் அரசியல் பேரணிகள் நடத்தும் போது காணப்பட்ட தேவையற்ற அதிகாரப் போட்டிகளோ, பாதுகாப்பு பதற்றங்களோ இன்றி புதிய அரசியல் கலாசாரத்துக்கு அரசாங்கம் முன்மாதிரியாகத் திகழ்கிறது.
நாட்டில் நிலவும் சிறிய அளவிலான பிரச்சினைகளைத் தீர்த்து, பொருளாதார ரீதியாகவும் அரசியல் கலாசார ரீதியாகவும் நாட்டை வலுப்படுத்தும் திட்டமிட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உதாரணமாக, 'Clean Sri Lanka' திட்டத்தை அரசாங்கத்தினால் மட்டும் தனித்து நடைமுறைப்படுத்த முடியாது. அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் மிகவும் அவசியமாகும்.
எனவே, அரசாங்கத்தைக் கைப்பற்ற எவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டார்களோ, அதேபோன்று நாட்டை கட்டியெழுப்பவும் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என டில்வின் சில்வா கேட்டுக்கொண்டார்.
களுத்துறை - புலத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
"வாக்களித்து அரசாங்கத்தை அமைத்ததோடு மக்களின் கடமை முடிந்துவிடவில்லை. இது மக்களின் அரசாங்கமாகும். எனவே, அரசாங்கத்துடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.
கடந்த காலங்களில் அரசியல் பேரணிகள் நடத்தும் போது காணப்பட்ட தேவையற்ற அதிகாரப் போட்டிகளோ, பாதுகாப்பு பதற்றங்களோ இன்றி புதிய அரசியல் கலாசாரத்துக்கு அரசாங்கம் முன்மாதிரியாகத் திகழ்கிறது.
நாட்டில் நிலவும் சிறிய அளவிலான பிரச்சினைகளைத் தீர்த்து, பொருளாதார ரீதியாகவும் அரசியல் கலாசார ரீதியாகவும் நாட்டை வலுப்படுத்தும் திட்டமிட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உதாரணமாக, 'Clean Sri Lanka' திட்டத்தை அரசாங்கத்தினால் மட்டும் தனித்து நடைமுறைப்படுத்த முடியாது. அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் மிகவும் அவசியமாகும்.
எனவே, அரசாங்கத்தைக் கைப்பற்ற எவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டார்களோ, அதேபோன்று நாட்டை கட்டியெழுப்பவும் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என டில்வின் சில்வா கேட்டுக்கொண்டார்.
Latest News
பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவன சட்டமூலம்: உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அறிவித்தார் சபாநாயகர்
Local
08 September 2026
முதலமைச்சர் விஜய் உருவக்கேலி செய்தமை கண்டிக்கும் முக்கிய கட்சி
Local
08 September 2026
ரூ. 50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் தாய்லாந்து பிரஜைகள் இருவர் கைது
Local
08 September 2026
இராணுவ பயன்பாட்டிற்காக மனிதவடிவ ரோபோக்களை சோதனை செய்யும் சீனா!
Local
08 September 2026
நான் போர்க் குற்றவாளியல்ல, ஆதாரத்துடன் நிரூபித்தால் ஏற்றுக்கொள்ள தயார் – சவேந்திர சில்வா
Local
08 September 2026
விஜய்யின் 'சுறா' பட நகைச்சுவைக் காட்சி - வைரலாகும் உதயநிதியின் இன்ஸ்டாகிராம் பதிவு
Local
08 September 2026
உயர் நீதிமன்றின் வியாக்கியானத்தை சபாநாயகர் இந்த வாரம் அறிவிப்பார் என எதிர்பார்ப்பு!
Local
08 September 2026
அமெரிக்கா - ஈரான் போரினால், எண்ணெய் விலையில் பாரிய அதிகரிப்பு
Local
08 September 2026
நாடாளுமன்றம் வர நாமலுக்கு அனுமதி!
Local
08 September 2026
“பாதி உள்ளே, பாதி வெளியே முடியாது”: ஹரி மற்றும் மேகன் நிலை குறித்த மன்னர் சார்லஸின் கடிதம் !
Local
08 September 2026