அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உடனான போருக்கு மத்தியில், ஈரான் அரசு தனது நாட்டில் சிறு ஆயுதக் குழுக்களின் கைது நடவடிக்கைகள் மற்றும் எல்லை மோதல்கள் குறித்த தகவல்களைத் தீவிரமாக வெளியிட்டு வருகிறது.
இதன் மூலம், போரை ஒரு "தேசியப் பாதுகாப்புப் போராட்டமாக" (national security struggle) சித்தரித்து. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தனது கட்டுப்பாட்டை வெளிப்படுத்த ஈரான் முயற்சிப்பதாக செய்தி ஊடகம் ஒன்று கூறுகிறது.
கடந்த ஜனவரி மாதம் நடந்த நாடு தழுவிய போராட்டங்களின் போது வன்முறைகளில் ஈடுபட்டதாகக் கூறி, "ஜனாதிபதி எதிர்ப்பு" மற்றும் "ராணுவ ஆட்சியாட்சி ஆதரவு" குழுக்களைச் சேர்ந்தவர்களை, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) கைது செய்தது.
ஈரானின் மேற்கு எல்லைப் பகுதிகளில் ஈராக் எல்லையை ஒட்டி குர்திஷ் ஆயுதக் குழுக்கள் (PJAK, PDKI, PAK) செயல்பட்டு வருகின்றன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு அவை திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் தென்கிழக்கு எல்லைப் பகுதிகளில் பிரிவினைவாத பலோச் போராளிக் குழுவான 'ஜெய்த் அல்-அத்ல்' (Jaish al-Adl) பாதுகாப்புப் படையினருடன் அவ்வப்போது மோதல்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில் குறித்த ஆயுதக்குழுக்களையும் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் ஈரானிய படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி, 100% பணவீக்கம் மற்றும் போர் அழுத்தம் காரணமாக மக்கள் மீண்டும் வீதிக்கு வந்து போராடுவார்கள் அல்லது அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்வார்கள் என்று அமெரிக்கா நம்புவதாக செய்தி ஊடகம் கூறுகிறது.
எனினும் அமெரிக்க பொருளாதார தடைகளுக்கு எதிரான திட்டங்களை வகுத்துள்ளதாக ஈரான் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
நாட்டுக்கே உரிய மனித உரிமை ஆணைகள் காலவரையறையின்றி நீடிக்கக் கூடாது – ஐ.நா.விடம் இலங்கை கோரிக்கை
Local
09 September 2026
நடிகர் அஜித்தின் மறுபக்கம்: படப்பிடிப்புத் தளத்தில் அவர் காட்டும் அன்பு குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சி!
Local
09 September 2026
ஒரே ஒரு முடிவு மொத்த வாழ்க்கையையும் மாற்றுமா? : இயக்குநர் ஜேசன் சஞ்சய் வைரல் பேச்சு!
Local
09 September 2026
இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் 3 புதிய பாலங்கள் திறப்பு!
Local
09 September 2026
இந்தியா - இலங்கை இடையே மூன்று புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
Local
09 September 2026
இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்பு - ஜனாதிபதி!
Local
09 September 2026
குறைந்த எடைக் கொண்ட பாணை விற்பனை செய்த 54 இடங்கள் முற்றுகை
Local
09 September 2026
தலவத்துகொடை கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது
Local
09 September 2026
சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்காதவர்களுக்கு செப்டம்பர் 30 வரை கால அவகாசம்
Local
09 September 2026
டிட்வா சூறாவளியால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு டிசம்பர் 31 வரை நீடிப்பு
Local
09 September 2026