விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இன்று (8) நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் வழங்கியுள்ள அனுமதியின் அடிப்படையில், அவர் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்படுவார் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதன்ன தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஊடாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த கோரிக்கைக்கு அமைய அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் குடும்ப உறவினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, அவருக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவை உட்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விளக்கமறியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் நலன் விசாரிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் நேற்று விளக்கமறியல் சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சபாநாயகர் வழங்கியுள்ள அனுமதியின் அடிப்படையில், அவர் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்படுவார் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதன்ன தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஊடாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த கோரிக்கைக்கு அமைய அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் குடும்ப உறவினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, அவருக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவை உட்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விளக்கமறியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் நலன் விசாரிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் நேற்று விளக்கமறியல் சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு!
Local
10 September 2026
மருத்துவப் பரிந்துரையின்றி மயக்க மாத்திரைகளை விநியோகித்த “பெத்தி அக்கா” கைது!
Local
10 September 2026
கல்வித்துறையில் அதிரடி மாற்றம்: GPA முறைக்கு பதிலாக அறிமுகமாகிறது புதிய 'Weighted Average Marks' முறை!
Local
10 September 2026
கல்வி முறையில் அதிரடி மாற்றம்: சாதாரண தரப் பரீட்சை 7 பாடங்களாக மட்டுப்படுத்த பரிந்துரை
Local
10 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு
Local
10 September 2026
அதிரடி திட்டங்களுடன் லண்டன் செல்லும் முதலமைச்சர் – விஜய் பயணிக்கும் பயணிகள் வானூர்தியில் இத்தனை வசதிகளா?
Local
10 September 2026
சர்ச்சைகுள்ளான பாராட்டும் - சூர்யாவை பழிதீர்த்தாரா? விவாதப் பொருளான சிவகார்த்திகேயனின் வாழ்த்து
Local
10 September 2026
ஸூக்கார் தீவின் கட்டுப்பாட்டை முழுமையாகக் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்
Local
10 September 2026
நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஜெனீவா நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் முறைப்பாடு!
Local
10 September 2026
4.62 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிலக்கரி எவ்வாறு மாயமானது ? - நாடாளுமன்றத்தில் நாமல் கேள்வி!
Local
10 September 2026