General08 September 2026

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வந்தடைந்தார்!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்துள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்ட அவர், "மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக புதுடெல்லியிலிருந்து இலங்கை புறப்படவுள்ளதாகவும் இந்த விஜயத்தின் போது இலங்கைத் தலைவர்களுடன் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் வாழும் துடிப்பான இந்தியச் சமூகத்தினருடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நமது நீண்டகாலப் பங்களிப்பு மற்றும் ஆழமான வரலாற்று, நாகரிகத் தொடர்புகளுக்கு அப்பால், 'அண்டை நாடுகளுக்கு முதல் உரிமை' (Neighbourhood First) மற்றும் 'மகாசாகர்' (MAHASAGAR) ஆகிய முன்னெடுப்புகளின் கீழ் இலங்கை, தங்களின் மிக முக்கியப் பங்காளிகளில் ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது பாதுகாப்பு, பொருளாதார ஈடுபாடு, கடல்சார் விவகாரங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes