இலங்கைப் பிரஜைகளுக்கு தாய்லாந்து வழங்கி வந்த இலவச விசா வசதி எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்துக்குச் சென்ற சில இலங்கையர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவங்களே இந்த முடிவுக்கான பிரதான காரணம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைக்காலத்தில் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாய்லாந்தில் இருந்து இலங்கை வந்த சில பிக்குகள் குஷ் எனப்படும் போதைப்பொருளை கொண்டு வந்ததாகக் கூறப்படும் சம்பவமும் பதிவாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்களை கருத்திற்கொண்டே இலங்கையர்களுக்கான இலவச விசா வசதியை இரத்து செய்ய தாய்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்படி, செப்டெம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர் தாய்லாந்துக்குப் பயணம் செய்யும் இலங்கைப் பிரஜைகள், பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் விசா பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த முடிவு தொடர்பில் தாய்லாந்து அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் விசா வசதிகள் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவு தாய்லாந்து தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் தாய்லாந்துடன் குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தை கைச்சாத்திட இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், அதன் மூலம் இலங்கையர்களுக்கு மீண்டும் விசா இல்லா பயண வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என நம்புவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
Latest News
மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் அரசியல் யுகம் முடிந்துவிட்டது!- ஜனாதிபதி
Local
13 September 2026
சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் களம் - மாபெரும் பலத்தைக் காட்ட ஒன்றுதிரளும் சஜித் அணி!
Local
13 September 2026
வானூர்தி கடத்தலை சாதுரியமாக முறியடித்த இலங்கையின் முதல் பெண் இராஜதந்திரி மானெல் அபேசேகர மறைவு!
Local
13 September 2026
வெளிப்புற எதிரியை விட நாட்டுக்குள் இருக்கும் எதிரியே மிகவும் ஆபத்தானவன் - மகிந்த ராஜபக்ஷ
Local
13 September 2026
24 வயதில் உயிரிழந்த பிரபல முஃபாங் இன்ஃப்ளூயன்சர் – இறுதிப் பதிவு ஏற்படுத்திய அதிர்ச்சி!
Local
13 September 2026
பொன்சேகா வழக்கு சந்தேகநபர் மீதான பிணை உத்தரவை எதிர்த்து சட்டமா அதிபர் மேன்முறையீடு!
Local
13 September 2026
சிறுவயதுத் தோழி தான் சொந்தச் சகோதரியா? : 15 வருடங்களுக்குப் பின் வெளிவந்த உண்மை - சினிமா கதையை மிஞ்சிய உண்மையான நெகிழ்ச்சி சம்பவம்!
Local
13 September 2026
முதல் இருபதுக்கு 20: சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்; சஞ்சு சாம்சனுக்கு ஓய்வளித்தாலும் எந்தத் தவறும் இல்லை!
Local
13 September 2026
வாகன இலக்கத் தகடுகளை விரைவாக விநியோகிக்க புதிய நடவடிக்கை - மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்
Local
13 September 2026
பிரதமர் மோடியின் சர்வதேச ராஜதந்திரத்திற்கு ரவி சாஸ்திரி புகழாரம்: 'பாரத் மண்டப' புகைப்படத்துடன் பெருமிதம்!
Local
13 September 2026