இலங்கைப் பிரஜைகளுக்கு தாய்லாந்து வழங்கி வந்த இலவச விசா வசதி எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்துக்குச் சென்ற சில இலங்கையர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவங்களே இந்த முடிவுக்கான பிரதான காரணம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைக்காலத்தில் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாய்லாந்தில் இருந்து இலங்கை வந்த சில பிக்குகள் குஷ் எனப்படும் போதைப்பொருளை கொண்டு வந்ததாகக் கூறப்படும் சம்பவமும் பதிவாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்களை கருத்திற்கொண்டே இலங்கையர்களுக்கான இலவச விசா வசதியை இரத்து செய்ய தாய்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்படி, செப்டெம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர் தாய்லாந்துக்குப் பயணம் செய்யும் இலங்கைப் பிரஜைகள், பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் விசா பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த முடிவு தொடர்பில் தாய்லாந்து அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் விசா வசதிகள் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவு தாய்லாந்து தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் தாய்லாந்துடன் குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தை கைச்சாத்திட இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், அதன் மூலம் இலங்கையர்களுக்கு மீண்டும் விசா இல்லா பயண வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என நம்புவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
Latest News
கொங்கோவில் தீவிபத்து: மாணவர்கள் உட்பட்ட பலர் பலி
Local
11 September 2026
யோஷித ராஜபக்ச வழக்கில், பொய் சாட்சியம் - மன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது
Local
11 September 2026
குடிநீர்ப் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்தவருக்கு 750,000 ரூபாய் அபராதம்
Local
11 September 2026
பயணிகள் வானூர்தியில் லண்டனுக்கு சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - காரணம் என்ன?
Local
11 September 2026
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் : முன்னிலை வகிக்கும் இங்கிலாந்து!
Local
11 September 2026
ஈராக்கின் ஆயுதக்குழுவுக்கு எதிராக தடை விதித்த அமெரிக்கா!
Local
11 September 2026
தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதலில் இரண்டு சிறார்கள் பலி தந்தை படுகாயம்
Local
11 September 2026
கியானி இன்ஃபான்டினோவுக்கான தமது ஆதரவை விலக்கிக்கொண்ட பிரான்ஸ் கால்பந்தாட்ட அமைப்பு!
Local
11 September 2026
சிரேஷ்ட அமெரிக்கர்களுக்கு 5 ஆயிரம் டொலர்களை வழங்கப்போகும் ட்ரம்ப்!
Local
11 September 2026
20 ஆண்டுகளாக ஒரே எண்களைத் தேர்ந்தெடுத்து லொத்தரில் ரூ.1.30 கோடி வென்ற பெண்!
Local
11 September 2026