முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான கையூட்டல் ஊழல் வழக்கில் தண்டனையைக் குறைத்துத் தருவதாகக் கூறி, அவரது மனைவியிடம் 750,000 கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நீதிமன்ற உதவியாளர் ஒருவர் செப்டம்பர் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தலைமை நீதிவான் அசங்க போதரமை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கையூட்டல் அல்லது ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு (CIABOC) முன்வைத்த விபரங்களைக் கருத்தில் கொண்டு இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜீ.ஏ. சரித் குமார என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் குறித்த மேல் நீதிமன்ற நீதிபதியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வழக்கைப் பற்றி பேச முயன்றுள்ளார்.
வழக்குகளைப் பற்றி பேச அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பியதுடன்,அவருடன் உரையாட மறுத்துள்ளார்.
இதனை நீதிமன்றத்தில் பேச முடியாது என்றும், தனியாகச் சந்தித்துப் பேசலாம் என்றும் சந்தேகநபர் நீதிபதியிடம் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அத்தனகல்ல நீதிமன்ற அதிகாரி ஒருவர் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றப் புத்தகக் கட்டுநர் (Book Binder) ஒருவர் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக, அபிவிருத்தி அதிர்ஷ்டலாபச் சபையின் தலைவராக இருந்தபோது வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான 18 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு, கடந்த ஜூன் மாதம் கொழும்பு மேல் நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
Latest News
மாற்றுத்திறனாளிகளுக்காக ATM இயந்திரங்களில் புதிய வசதி!
Local
09 September 2026
விளக்கம் அளித்தும் ஓயாத சர்ச்சை: சட்டமன்ற மரபுகளை மீறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? - பதவியை கேள்விக்குள்ளாக்கிய திமுக!
Local
09 September 2026
சுகீஸ்வர பண்டார எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்
Local
09 September 2026
சிறுவர்களின் உடல்ரீதியான தொடுகை: சம்மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மருத்துவர் துஷாரா விக்ரமநாயக்க வலியுறுத்தல்
Local
09 September 2026
"சிக்மா படத்திற்கு விஜய் சேரின் ஆதரவு மிகப்பெரிய அடையாளம்" – சிலிர்க்க வைக்கும் சந்தீப் கிஷன் பேச்சு!
Local
09 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் பயணத்தின் எதிரொலி - கொழும்பு வந்தடைந்தது 'ஐ.என்.எஸ் உதயகிரி' போர்க்கப்பல்
Local
09 September 2026
இந்தியாவில் இதுவரை எங்குமே கண்டறியப்படாத 5 ஓராங்குட்டான் குட்டிகள் ஒடிசாவில் மீட்பு!
Local
09 September 2026
உள்நாட்டு தீவிரவாதிகளால் தான் அதிக ஆபத்து: அமெரிக்கர்களை மிரள வைக்கும் புதிய கருத்துக்கணிப்பு முடிவு!
Local
09 September 2026
நோர்வூட் அஸ்வெசும நிதி மோசடி: இரண்டு பெண் சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
Local
09 September 2026
இணையத்தை கலக்கும் 80s ட்ரெண்ட்: முதலமைச்சர் விஜய்யுடன் நடிகர் சதீஷ் வெளியிட்ட கலக்கல் நிழற்படம்!
Local
09 September 2026