முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான கையூட்டல் ஊழல் வழக்கில் தண்டனையைக் குறைத்துத் தருவதாகக் கூறி, அவரது மனைவியிடம் 750,000 கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நீதிமன்ற உதவியாளர் ஒருவர் செப்டம்பர் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தலைமை நீதிவான் அசங்க போதரமை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கையூட்டல் அல்லது ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு (CIABOC) முன்வைத்த விபரங்களைக் கருத்தில் கொண்டு இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜீ.ஏ. சரித் குமார என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் குறித்த மேல் நீதிமன்ற நீதிபதியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வழக்கைப் பற்றி பேச முயன்றுள்ளார்.
வழக்குகளைப் பற்றி பேச அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பியதுடன்,அவருடன் உரையாட மறுத்துள்ளார்.
இதனை நீதிமன்றத்தில் பேச முடியாது என்றும், தனியாகச் சந்தித்துப் பேசலாம் என்றும் சந்தேகநபர் நீதிபதியிடம் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அத்தனகல்ல நீதிமன்ற அதிகாரி ஒருவர் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றப் புத்தகக் கட்டுநர் (Book Binder) ஒருவர் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக, அபிவிருத்தி அதிர்ஷ்டலாபச் சபையின் தலைவராக இருந்தபோது வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான 18 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு, கடந்த ஜூன் மாதம் கொழும்பு மேல் நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
Latest News
பாகிஸ்தானிலிருந்து போதைப்பொருள் கடத்தல் : விசாரணைகளில் குளறுபடியா? - காவல்துறை சிறப்பு விசாரணை ஆரம்பம்!
Local
10 September 2026
காப்புரிமை உத்தரவை மீறியதாக இளையராஜா மீது வழக்கு – டெல்லி உயர்நீதிமன்றம் அறிக்கை!
Local
10 September 2026
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு வருகை
Local
10 September 2026
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இன்று நுவரெலியாவில்
Local
10 September 2026
பாணின் எடையை நுகர்வோருக்கு தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும் - நுகர்வோர் விவகார அதிகாரசபை
Local
10 September 2026
அடக்குமுறைகள் மூலம் எமது போராட்டத்தை நிறுத்த முடியாது - நாமல் எச்சரிக்கை
Local
10 September 2026
சூடான தேநீரால் புற்றுநோய் அபாயமா? - ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வு எச்சரிக்கை
Local
10 September 2026
சிறுவர்களை அச்சுறுத்தும் புற்றுநோய்: ஆண்டுதோறும் 1,000 குழந்தைகள் பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்
Local
10 September 2026
கிடுகிடுவென உயரும் தங்க விலை : அதிர்ச்சியில் நகைப் பிரியர்கள்!
Local
10 September 2026
நாமலின் கைது அநியாயமும் அரசியல் பழிவாங்கலுமாகும் - சாகர காரியவசம் குற்றச்சாட்டு
Local
10 September 2026