பொகவந்தலாவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தேயிலைத் தோட்டம் ஒன்றில் சிறுத்தையொன்று அடிக்கடி நடமாடுவதாக, தோட்டத் தொழிலாளி ஒருவர் காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளார்.
தேயிலைத் தோட்டத்தில் நடமாடிய சிறுத்தையை தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்த குறித்த தொழிலாளி, அந்தப் புகைப்படத்தையும் காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளார்.
குறித்த சிறுத்தை இரை தேடி, தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் தினமும் வருவதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, பொகவந்தலாவை காவல் நிலையப் பொறுப்பதிகாரி நுவன் மதுசங்க தெரிவித்துள்ளார்.
இதனால், தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, வனவிலங்கு அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவித்து, சிறுத்தையை அருகிலுள்ள போபத்தலாவ வனப்பகுதிக்கு பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த தொழிலாளி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பில் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு அறிவிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுமக்கள் சிறுத்தையை அணுகவோ, அதனைத் துரத்தவோ அல்லது அச்சுறுத்தவோ வேண்டாம் எனவும், சிறுத்தையின் நடமாட்டம் தொடர்பில் உடனடியாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Latest News
கொங்கோவில் தீவிபத்து: மாணவர்கள் உட்பட்ட பலர் பலி
Local
11 September 2026
யோஷித ராஜபக்ச வழக்கில், பொய் சாட்சியம் - மன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது
Local
11 September 2026
குடிநீர்ப் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்தவருக்கு 750,000 ரூபாய் அபராதம்
Local
11 September 2026
பயணிகள் வானூர்தியில் லண்டனுக்கு சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - காரணம் என்ன?
Local
11 September 2026
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் : முன்னிலை வகிக்கும் இங்கிலாந்து!
Local
11 September 2026
ஈராக்கின் ஆயுதக்குழுவுக்கு எதிராக தடை விதித்த அமெரிக்கா!
Local
11 September 2026
தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதலில் இரண்டு சிறார்கள் பலி தந்தை படுகாயம்
Local
11 September 2026
கியானி இன்ஃபான்டினோவுக்கான தமது ஆதரவை விலக்கிக்கொண்ட பிரான்ஸ் கால்பந்தாட்ட அமைப்பு!
Local
11 September 2026
சிரேஷ்ட அமெரிக்கர்களுக்கு 5 ஆயிரம் டொலர்களை வழங்கப்போகும் ட்ரம்ப்!
Local
11 September 2026
20 ஆண்டுகளாக ஒரே எண்களைத் தேர்ந்தெடுத்து லொத்தரில் ரூ.1.30 கோடி வென்ற பெண்!
Local
11 September 2026