உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று (9) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து வழங்கப்பட்ட உதவிகள் உள்ளிட்ட சிரமமான காலப்பகுதிகளில் இந்தியா வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது நன்றியைத் தெரிவித்தார்.
அத்துடன், 'ஒபரேஷன் சாகர் பந்து' (Operation Sagar Bandhu) ஊடாக இந்தியா மேற்கொண்ட மனிதாபிமான மற்றும் அனர்த்த நிவாரண முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
இராஜதந்திர மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளையும் தாண்டி, கலாசார, வரலாற்று மற்றும் மத ரீதியான பிணைப்புகளால் உருவான நீண்டகால நட்புறவாகவே இலங்கை - இந்திய உறவு உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
வர்த்தகம், அபிவிருத்தி, பாதுகாப்பு, கல்வி ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்தும், நாடாளுமன்ற மற்றும் பொதுத்துறைசார் திறன் கட்டமைப்பு, நிறுவனங்களை வலுப்படுத்தல் மற்றும் நல்லாட்சி தொடர்பாகவும் இதன்போது விரிவாக விவாதிக்கப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடரவும், மேலும் வலுப்படுத்தவும் வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.
இந்திய அமைச்சரின் இந்த விஜயத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதோடு, சுற்றுலா மற்றும் கல்வித் துறைகளில் பிராந்திய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவமும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலதிகமாக, அறிவுப் பரிமாற்றம், புதுமை மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) போன்ற பிரத்தியேக இந்திய நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து வழங்கப்பட்ட உதவிகள் உள்ளிட்ட சிரமமான காலப்பகுதிகளில் இந்தியா வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது நன்றியைத் தெரிவித்தார்.
அத்துடன், 'ஒபரேஷன் சாகர் பந்து' (Operation Sagar Bandhu) ஊடாக இந்தியா மேற்கொண்ட மனிதாபிமான மற்றும் அனர்த்த நிவாரண முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
இராஜதந்திர மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளையும் தாண்டி, கலாசார, வரலாற்று மற்றும் மத ரீதியான பிணைப்புகளால் உருவான நீண்டகால நட்புறவாகவே இலங்கை - இந்திய உறவு உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
வர்த்தகம், அபிவிருத்தி, பாதுகாப்பு, கல்வி ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்தும், நாடாளுமன்ற மற்றும் பொதுத்துறைசார் திறன் கட்டமைப்பு, நிறுவனங்களை வலுப்படுத்தல் மற்றும் நல்லாட்சி தொடர்பாகவும் இதன்போது விரிவாக விவாதிக்கப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடரவும், மேலும் வலுப்படுத்தவும் வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.
இந்திய அமைச்சரின் இந்த விஜயத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதோடு, சுற்றுலா மற்றும் கல்வித் துறைகளில் பிராந்திய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவமும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலதிகமாக, அறிவுப் பரிமாற்றம், புதுமை மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) போன்ற பிரத்தியேக இந்திய நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.
Latest News
கொழும்பு இசை நிகழ்ச்சி சர்ச்சை: நியோ தரப்பில் குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு
Local
12 September 2026
பட்டாசு வெடித்து 13 வயது சிறுவன் பலி! ஆலய உற்சவத்தில் நடந்த கொடூரம்
Local
12 September 2026
62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் நாளை மறுதினம் முதல் டெங்கு கட்டுப்பாட்டு வாரம்
Local
12 September 2026
AI நிழற்படங்கள் குறித்து அதிருப்தி: கிளியான் எம்பாப்பே கவலை!
Local
12 September 2026
செங்கடல் நுழைவாயிலைக் கைப்பற்றிய ஹவுதிகள்: சவூதி எண்ணெய் குழாய்ப் பாதை தற்காலிகமாக மூடல்!
Local
12 September 2026
2030 உலகக் கிண்ண இறுதிப்போட்டி: மொரோக்கோவின் உரிமைக்கோரலுக்கு ஃபீஃபா மறுப்பு
Local
12 September 2026
ஜனாதிபதி தலைமையில் பொலன்னறுவையில் இன்று பிரம்மாண்ட மக்கள் பேரணி!
Local
12 September 2026
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உணவு தவிர்ப்பு போராட்டம்
Local
12 September 2026
தலைமன்னார் பகுதியில் தவித்துக் கொண்டிருந்த இளைஞரை மீட்ட இலங்கை கடற்படையினர்
Local
12 September 2026
லண்டனில் இரு துருவங்கள் - பல கோடி மக்களின் எதிர்பார்ப்பு: சில்வர்ஸ்டோன் பந்தயத்தைத் தொடங்கி வைக்கிறார் விஜய்!
Local
12 September 2026