இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் வதைச் செயல்களுக்கு நீதி வழங்குவதில் அர்த்தபூர்வமான முன்னேற்றங்கள் எட்டப்படவில்லை என கனேடிய சட்டத்தரணிகள் உரிமைகள் கண்காணிப்பகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கவலை வெளியிட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரின் 2ஆவது அம்சத்தின் கீழ், கனேடிய சட்டத்தரணிகள் உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பின் சார்பில் ஹரிணி சிவலிங்கம் முன்வைத்த வாய்மூல அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செம்மணி புதைகுழித் தளத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாய்வுகள் குழந்தைகள் உட்பட 583 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இது நம்பகமான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்பகுதிக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், சுயாதீன தடயவியல் நிபுணர்களின் பங்களிப்புடன் வெளிப்படையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தமையும் இதன்போது நினைவூட்டப்பட்டுள்ளது.
மினசோட்டா நெறிமுறை உள்ளிட்ட சர்வதேச தரநிலைகளுக்கு அமைய, சுயாதீன சர்வதேச தடயவியல் பார்வையாளர்களின் பங்களிப்புடன் பாதிக்கப்பட்டோர் மையப்படுத்தப்பட்ட அகழாய்வு செயற்பாட்டை உறுதிப்படுத்துமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இலங்கையைக் கேட்டுக் கொண்டுள்ளன.
எனினும், அகழாய்வுகளை கண்காணிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் உறவினர்கள் மீதான தொடர்ச்சியான கண்காணிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆவணப்படுத்தியுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறல் திட்டம் மற்றும் பேரவையின் ஏனைய தீர்மானங்கள் இருந்தபோதிலும், நீதி வழங்குவதில் இலங்கை அரசாங்கம் போதிய ஈடுபாட்டைக் காட்டவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே, ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரும் பேரவையும், இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூறல் திட்டத்துடன் முழுமையாக ஒத்துழைக்குமாறு வலியுறுத்த வேண்டும் எனவும், உள்நாட்டு, வெளிநாட்டு அல்லது சர்வதேச நீதிமன்றங்களில் எதிர்காலச் குற்றவியல் நடவடிக்கைகளுக்காகச் சாட்சிகளைச் சேகரித்து பாதுகாப்பதை உறுதிப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரின் 2ஆவது அம்சத்தின் கீழ், கனேடிய சட்டத்தரணிகள் உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பின் சார்பில் ஹரிணி சிவலிங்கம் முன்வைத்த வாய்மூல அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செம்மணி புதைகுழித் தளத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாய்வுகள் குழந்தைகள் உட்பட 583 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இது நம்பகமான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்பகுதிக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், சுயாதீன தடயவியல் நிபுணர்களின் பங்களிப்புடன் வெளிப்படையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தமையும் இதன்போது நினைவூட்டப்பட்டுள்ளது.
மினசோட்டா நெறிமுறை உள்ளிட்ட சர்வதேச தரநிலைகளுக்கு அமைய, சுயாதீன சர்வதேச தடயவியல் பார்வையாளர்களின் பங்களிப்புடன் பாதிக்கப்பட்டோர் மையப்படுத்தப்பட்ட அகழாய்வு செயற்பாட்டை உறுதிப்படுத்துமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இலங்கையைக் கேட்டுக் கொண்டுள்ளன.
எனினும், அகழாய்வுகளை கண்காணிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் உறவினர்கள் மீதான தொடர்ச்சியான கண்காணிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆவணப்படுத்தியுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறல் திட்டம் மற்றும் பேரவையின் ஏனைய தீர்மானங்கள் இருந்தபோதிலும், நீதி வழங்குவதில் இலங்கை அரசாங்கம் போதிய ஈடுபாட்டைக் காட்டவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே, ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரும் பேரவையும், இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூறல் திட்டத்துடன் முழுமையாக ஒத்துழைக்குமாறு வலியுறுத்த வேண்டும் எனவும், உள்நாட்டு, வெளிநாட்டு அல்லது சர்வதேச நீதிமன்றங்களில் எதிர்காலச் குற்றவியல் நடவடிக்கைகளுக்காகச் சாட்சிகளைச் சேகரித்து பாதுகாப்பதை உறுதிப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
Latest News
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்!
Local
13 September 2026
ஒரே தேங்காயில் 4 கண்கள் : உள்ளே இருந்த மற்றொரு ஆச்சரியம் - வைரலாகும் படங்கள்!
Local
13 September 2026
செப்டம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பேருந்துகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம்!
Local
13 September 2026
இலங்கை - தாய்லாந்து இடையே புதிய தொழிலாளர் உடன்படிக்கை : அமைச்சர் விஜித ஹேரத் தாய்லாந்து விஜயம்!
Local
13 September 2026
இந்தோனேசியாவில் பயணிகள் கப்பல் விபத்து- 140 பேர் மாயம்,103 பேர் மீட்பு
Local
13 September 2026
தீவிரமடையும் 'எல் நினோ' : உலகம் இதுவரை பார்க்காத கடுமையான வெப்பநிலை - வெளிவந்த புதிய அறிக்கை!
Local
13 September 2026
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்: டெஸ்ட் போட்டிகளில் புதிய வரலாற்று சாதனை!
Local
13 September 2026
பல்கலைக்கழக பணியிட ஆட்சேர்ப்புகளை விரைவுபடுத்த கல்வி அமைச்சு அதிரடி!
Local
13 September 2026
லண்டன் சிற்றூந்து பந்தய களத்தில் திடீர் திருப்பம் : ரேசர் உடையில் என்ட்ரி கொடுத்த விஜய் - இணையத்தை உலுக்கும் ட்ரெண்டிங் காட்சிகள்!
Local
13 September 2026
அநுராதபுர பேரணி - மகிந்த ராஜபக்சவைச் சிங்கமாக சித்தரித்து வெளியான காணொளி
Local
13 September 2026