இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் வதைச் செயல்களுக்கு நீதி வழங்குவதில் அர்த்தபூர்வமான முன்னேற்றங்கள் எட்டப்படவில்லை என கனேடிய சட்டத்தரணிகள் உரிமைகள் கண்காணிப்பகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கவலை வெளியிட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரின் 2ஆவது அம்சத்தின் கீழ், கனேடிய சட்டத்தரணிகள் உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பின் சார்பில் ஹரிணி சிவலிங்கம் முன்வைத்த வாய்மூல அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செம்மணி புதைகுழித் தளத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாய்வுகள் குழந்தைகள் உட்பட 583 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இது நம்பகமான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்பகுதிக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், சுயாதீன தடயவியல் நிபுணர்களின் பங்களிப்புடன் வெளிப்படையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தமையும் இதன்போது நினைவூட்டப்பட்டுள்ளது.
மினசோட்டா நெறிமுறை உள்ளிட்ட சர்வதேச தரநிலைகளுக்கு அமைய, சுயாதீன சர்வதேச தடயவியல் பார்வையாளர்களின் பங்களிப்புடன் பாதிக்கப்பட்டோர் மையப்படுத்தப்பட்ட அகழாய்வு செயற்பாட்டை உறுதிப்படுத்துமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இலங்கையைக் கேட்டுக் கொண்டுள்ளன.
எனினும், அகழாய்வுகளை கண்காணிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் உறவினர்கள் மீதான தொடர்ச்சியான கண்காணிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆவணப்படுத்தியுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறல் திட்டம் மற்றும் பேரவையின் ஏனைய தீர்மானங்கள் இருந்தபோதிலும், நீதி வழங்குவதில் இலங்கை அரசாங்கம் போதிய ஈடுபாட்டைக் காட்டவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே, ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரும் பேரவையும், இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூறல் திட்டத்துடன் முழுமையாக ஒத்துழைக்குமாறு வலியுறுத்த வேண்டும் எனவும், உள்நாட்டு, வெளிநாட்டு அல்லது சர்வதேச நீதிமன்றங்களில் எதிர்காலச் குற்றவியல் நடவடிக்கைகளுக்காகச் சாட்சிகளைச் சேகரித்து பாதுகாப்பதை உறுதிப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரின் 2ஆவது அம்சத்தின் கீழ், கனேடிய சட்டத்தரணிகள் உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பின் சார்பில் ஹரிணி சிவலிங்கம் முன்வைத்த வாய்மூல அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செம்மணி புதைகுழித் தளத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாய்வுகள் குழந்தைகள் உட்பட 583 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இது நம்பகமான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்பகுதிக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், சுயாதீன தடயவியல் நிபுணர்களின் பங்களிப்புடன் வெளிப்படையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தமையும் இதன்போது நினைவூட்டப்பட்டுள்ளது.
மினசோட்டா நெறிமுறை உள்ளிட்ட சர்வதேச தரநிலைகளுக்கு அமைய, சுயாதீன சர்வதேச தடயவியல் பார்வையாளர்களின் பங்களிப்புடன் பாதிக்கப்பட்டோர் மையப்படுத்தப்பட்ட அகழாய்வு செயற்பாட்டை உறுதிப்படுத்துமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இலங்கையைக் கேட்டுக் கொண்டுள்ளன.
எனினும், அகழாய்வுகளை கண்காணிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் உறவினர்கள் மீதான தொடர்ச்சியான கண்காணிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆவணப்படுத்தியுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறல் திட்டம் மற்றும் பேரவையின் ஏனைய தீர்மானங்கள் இருந்தபோதிலும், நீதி வழங்குவதில் இலங்கை அரசாங்கம் போதிய ஈடுபாட்டைக் காட்டவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே, ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரும் பேரவையும், இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூறல் திட்டத்துடன் முழுமையாக ஒத்துழைக்குமாறு வலியுறுத்த வேண்டும் எனவும், உள்நாட்டு, வெளிநாட்டு அல்லது சர்வதேச நீதிமன்றங்களில் எதிர்காலச் குற்றவியல் நடவடிக்கைகளுக்காகச் சாட்சிகளைச் சேகரித்து பாதுகாப்பதை உறுதிப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
Latest News
பயணிகள் வானூர்தியில் லண்டனுக்கு சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - காரணம் என்ன?
Local
11 September 2026
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் : முன்னிலை வகிக்கும் இங்கிலாந்து!
Local
11 September 2026
ஈராக்கின் ஆயுதக்குழுவுக்கு எதிராக தடை விதித்த அமெரிக்கா!
Local
11 September 2026
தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதலில் இரண்டு சிறார்கள் பலி தந்தை படுகாயம்
Local
11 September 2026
கியானி இன்ஃபான்டினோவுக்கான தமது ஆதரவை விலக்கிக்கொண்ட பிரான்ஸ் கால்பந்தாட்ட அமைப்பு!
Local
11 September 2026
சிரேஷ்ட அமெரிக்கர்களுக்கு 5 ஆயிரம் டொலர்களை வழங்கப்போகும் ட்ரம்ப்!
Local
11 September 2026
20 ஆண்டுகளாக ஒரே எண்களைத் தேர்ந்தெடுத்து லொத்தரில் ரூ.1.30 கோடி வென்ற பெண்!
Local
11 September 2026
தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்!
Local
11 September 2026
ஹவுதி அமைப்பிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை: "செங்கல்லுக்கு பதிலாக கல்லைக் கொண்டு பதிலடி தரத் தேவையில்லை
Local
11 September 2026
ஆசிய செம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோவின் அல்-நஸர்: 3 ஆவது தொடர்ச்சியான கிண்ணத்தை வெல்ல சவுதி அணிகள் தீவிரம்!
Local
11 September 2026