இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் வதைச் செயல்களுக்கு நீதி வழங்குவதில் அர்த்தபூர்வமான முன்னேற்றங்கள் எட்டப்படவில்லை என கனேடிய சட்டத்தரணிகள் உரிமைகள் கண்காணிப்பகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கவலை வெளியிட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரின் 2ஆவது அம்சத்தின் கீழ், கனேடிய சட்டத்தரணிகள் உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பின் சார்பில் ஹரிணி சிவலிங்கம் முன்வைத்த வாய்மூல அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செம்மணி புதைகுழித் தளத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாய்வுகள் குழந்தைகள் உட்பட 583 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இது நம்பகமான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்பகுதிக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், சுயாதீன தடயவியல் நிபுணர்களின் பங்களிப்புடன் வெளிப்படையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தமையும் இதன்போது நினைவூட்டப்பட்டுள்ளது.
மினசோட்டா நெறிமுறை உள்ளிட்ட சர்வதேச தரநிலைகளுக்கு அமைய, சுயாதீன சர்வதேச தடயவியல் பார்வையாளர்களின் பங்களிப்புடன் பாதிக்கப்பட்டோர் மையப்படுத்தப்பட்ட அகழாய்வு செயற்பாட்டை உறுதிப்படுத்துமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இலங்கையைக் கேட்டுக் கொண்டுள்ளன.
எனினும், அகழாய்வுகளை கண்காணிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் உறவினர்கள் மீதான தொடர்ச்சியான கண்காணிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆவணப்படுத்தியுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறல் திட்டம் மற்றும் பேரவையின் ஏனைய தீர்மானங்கள் இருந்தபோதிலும், நீதி வழங்குவதில் இலங்கை அரசாங்கம் போதிய ஈடுபாட்டைக் காட்டவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே, ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரும் பேரவையும், இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூறல் திட்டத்துடன் முழுமையாக ஒத்துழைக்குமாறு வலியுறுத்த வேண்டும் எனவும், உள்நாட்டு, வெளிநாட்டு அல்லது சர்வதேச நீதிமன்றங்களில் எதிர்காலச் குற்றவியல் நடவடிக்கைகளுக்காகச் சாட்சிகளைச் சேகரித்து பாதுகாப்பதை உறுதிப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரின் 2ஆவது அம்சத்தின் கீழ், கனேடிய சட்டத்தரணிகள் உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பின் சார்பில் ஹரிணி சிவலிங்கம் முன்வைத்த வாய்மூல அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செம்மணி புதைகுழித் தளத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாய்வுகள் குழந்தைகள் உட்பட 583 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இது நம்பகமான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்பகுதிக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், சுயாதீன தடயவியல் நிபுணர்களின் பங்களிப்புடன் வெளிப்படையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தமையும் இதன்போது நினைவூட்டப்பட்டுள்ளது.
மினசோட்டா நெறிமுறை உள்ளிட்ட சர்வதேச தரநிலைகளுக்கு அமைய, சுயாதீன சர்வதேச தடயவியல் பார்வையாளர்களின் பங்களிப்புடன் பாதிக்கப்பட்டோர் மையப்படுத்தப்பட்ட அகழாய்வு செயற்பாட்டை உறுதிப்படுத்துமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இலங்கையைக் கேட்டுக் கொண்டுள்ளன.
எனினும், அகழாய்வுகளை கண்காணிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் உறவினர்கள் மீதான தொடர்ச்சியான கண்காணிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆவணப்படுத்தியுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறல் திட்டம் மற்றும் பேரவையின் ஏனைய தீர்மானங்கள் இருந்தபோதிலும், நீதி வழங்குவதில் இலங்கை அரசாங்கம் போதிய ஈடுபாட்டைக் காட்டவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே, ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரும் பேரவையும், இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூறல் திட்டத்துடன் முழுமையாக ஒத்துழைக்குமாறு வலியுறுத்த வேண்டும் எனவும், உள்நாட்டு, வெளிநாட்டு அல்லது சர்வதேச நீதிமன்றங்களில் எதிர்காலச் குற்றவியல் நடவடிக்கைகளுக்காகச் சாட்சிகளைச் சேகரித்து பாதுகாப்பதை உறுதிப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
Latest News
லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
Local
11 September 2026
மகளிர் ஆசியக் கிண்ணம் : 10 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் அணி!
Local
11 September 2026
மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு!
Local
10 September 2026
மருத்துவப் பரிந்துரையின்றி மயக்க மாத்திரைகளை விநியோகித்த “பெத்தி அக்கா” கைது!
Local
10 September 2026
கல்வித்துறையில் அதிரடி மாற்றம்: GPA முறைக்கு பதிலாக அறிமுகமாகிறது புதிய 'Weighted Average Marks' முறை!
Local
10 September 2026
கல்வி முறையில் அதிரடி மாற்றம்: சாதாரண தரப் பரீட்சை 7 பாடங்களாக மட்டுப்படுத்த பரிந்துரை
Local
10 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு
Local
10 September 2026
அதிரடி திட்டங்களுடன் லண்டன் செல்லும் முதலமைச்சர் – விஜய் பயணிக்கும் பயணிகள் வானூர்தியில் இத்தனை வசதிகளா?
Local
10 September 2026
சர்ச்சைகுள்ளான பாராட்டும் - சூர்யாவை பழிதீர்த்தாரா? விவாதப் பொருளான சிவகார்த்திகேயனின் வாழ்த்து
Local
10 September 2026
ஸூக்கார் தீவின் கட்டுப்பாட்டை முழுமையாகக் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்
Local
10 September 2026