ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் வானூர்திகள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிடுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த வழக்கில் பிரதான சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள கபில சந்திரசேன என்பவரால் பெறப்பட்ட கையூட்டல் பணத்தின் ஒரு பகுதி நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இது தொடர்பான ஆலோசனைகளின் பேரில் நகர்த்தல் பத்திரம் (Motion) ஒன்றை தாக்கல் செய்து, வழக்கை விசாரணைக்கு எடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விபரங்களை சமர்ப்பித்த பின்னர், நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவிக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு வானூர்திகள் கொள்வனவு செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் கொடுக்கல் வாங்கலின் போது, 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் ஒரு கோடி ரூபாவை கையூட்டலாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்ஷ அண்மையில் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த வழக்கில் பிரதான சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள கபில சந்திரசேன என்பவரால் பெறப்பட்ட கையூட்டல் பணத்தின் ஒரு பகுதி நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இது தொடர்பான ஆலோசனைகளின் பேரில் நகர்த்தல் பத்திரம் (Motion) ஒன்றை தாக்கல் செய்து, வழக்கை விசாரணைக்கு எடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விபரங்களை சமர்ப்பித்த பின்னர், நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவிக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு வானூர்திகள் கொள்வனவு செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் கொடுக்கல் வாங்கலின் போது, 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் ஒரு கோடி ரூபாவை கையூட்டலாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்ஷ அண்மையில் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
கம்பஹாவில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!
Local
12 September 2026
லண்டனில் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் விஜய்!
Local
12 September 2026
தெஹிவளை கைக்குண்டு வீச்சில் இரு சிறுவர்கள் பலியானமை தொடர்பில் ஐ.நா கவலை!
Local
12 September 2026
லண்டனில் அஜித் - விஜய் நெகிழ்ச்சி சந்திப்பு: ஆரத்தழுவி வாழ்த்து!
Local
12 September 2026
“ஈழம் கேட்க மாட்டேன் - 2029இல் நாமல் ஜனாதிபதியாவது உறுதி" - மொட்டு மேடையில் அர்ச்சுனா பேச்சு!
Local
12 September 2026
மரண தண்டனை குறித்து இன்னும் தீர்மானம் இல்லை: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவினருக்கு மன்னிப்பே கிடையாது - ஜனாதிபதி
Local
12 September 2026
நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக கம்சி குணரட்னம் நியமனம்
Local
12 September 2026
முத்துராஜவெல வனப்பகுதியில் தீப்பரவல் : கட்டுப்படுத்த தீவிர வான்வழி நடவடிக்கை!
Local
12 September 2026
இலங்கையில் உடனடியாக எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
Local
12 September 2026
இலங்கையை அச்சுறுத்தும் எல் நினோ: ஒக்டோபரில் கனமழை....பெப்ரவரியில் கடும் வறட்சி!
Local
12 September 2026