தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அவதானம் திரும்பியுள்ளது.
இரு சிறுவர்களின் உயிரைப் பறித்த இச்சம்பவம் குறித்துத் தான் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அன்றே (Marc-André Franche) தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறான வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய தரப்பினர் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் தனது 'எக்ஸ்' பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையிலுள்ள வீடொன்றின் மீது நேற்று (11) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இரு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
அவர்களின் தந்தை பலத்த காயமடைந்து களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை நடத்திவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி, நேற்று பாதுக்க, பஹள போபே பகுதியில் கைவிடப்பட்டுக் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இருப்பினும், சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இதேவேளை, இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் இலக்கு மாறியே நடத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை சந்தேகிக்கிறது.
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிள்ளைகளின் தந்தையின் சகோதரரது வீட்டை இலக்கு வைத்தே அவர்கள் வந்துள்ளதாகவும், வீடு மாறியதன் காரணமாகவே இந்தச் சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுவர்களின் உடல்கள் இன்று (12) பிற்பகல் அவர்களின் உறவினர் வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரு சிறுவர்களின் உயிரைப் பறித்த இச்சம்பவம் குறித்துத் தான் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அன்றே (Marc-André Franche) தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறான வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய தரப்பினர் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் தனது 'எக்ஸ்' பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையிலுள்ள வீடொன்றின் மீது நேற்று (11) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இரு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
அவர்களின் தந்தை பலத்த காயமடைந்து களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை நடத்திவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி, நேற்று பாதுக்க, பஹள போபே பகுதியில் கைவிடப்பட்டுக் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இருப்பினும், சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இதேவேளை, இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் இலக்கு மாறியே நடத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை சந்தேகிக்கிறது.
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிள்ளைகளின் தந்தையின் சகோதரரது வீட்டை இலக்கு வைத்தே அவர்கள் வந்துள்ளதாகவும், வீடு மாறியதன் காரணமாகவே இந்தச் சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுவர்களின் உடல்கள் இன்று (12) பிற்பகல் அவர்களின் உறவினர் வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
மனிதாபிமானத்திற்கு அச்சுறுத்தலா AI? உலகளாவிய கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரிக்கை!
Local
13 September 2026
காவல்துறையின் அதிரடி நடவடிக்கை: கம்பஹாவில் சமிக்ஞையை மீறிய வாகனத்திற்கு நேர்ந்த கதி!
Local
13 September 2026
அஜித்தின் பந்தயத்தை பார்க்க வந்த விஜய்: சர்ப்ரைஸ் கொடுத்த த்ரிஷா!
Local
13 September 2026
கொழும்பில் 40 வருட பழமையான வீட்டுத்தொகுதிகள்: பிரதி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Local
13 September 2026
இலங்கைக்கு வருகை தந்த IMF குழு: நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை ஆரம்பம்!
Local
13 September 2026
ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவு சட்டவிரோதமானது: அமெரிக்க நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
Local
13 September 2026
தொடருந்து போக்குவரத்தில் எடுக்கப்பட்ட விசேட தீர்மானம்: தொழிற்சங்கங்கள் அதிரடி முடிவு!
Local
13 September 2026
சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் பரபரப்பு: விபத்தில் சிக்கிய அஜித்குமாரின் சிற்றூந்து!
Local
12 September 2026
"திருட வேண்டாம் என்று அன்றே தந்தை சொல்லியிருக்க வேண்டும்" - ஜனாதிபதி அநுர!
Local
12 September 2026
"இரும்பு கம்பிகளுக்கு மத்தியிலும் உங்களை நான் பார்க்கிறேன்” சிறையிலிருந்து நாமல் செய்தி!
Local
12 September 2026