தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அவதானம் திரும்பியுள்ளது.
இரு சிறுவர்களின் உயிரைப் பறித்த இச்சம்பவம் குறித்துத் தான் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அன்றே (Marc-André Franche) தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறான வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய தரப்பினர் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் தனது 'எக்ஸ்' பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையிலுள்ள வீடொன்றின் மீது நேற்று (11) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இரு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
அவர்களின் தந்தை பலத்த காயமடைந்து களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை நடத்திவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி, நேற்று பாதுக்க, பஹள போபே பகுதியில் கைவிடப்பட்டுக் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இருப்பினும், சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இதேவேளை, இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் இலக்கு மாறியே நடத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை சந்தேகிக்கிறது.
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிள்ளைகளின் தந்தையின் சகோதரரது வீட்டை இலக்கு வைத்தே அவர்கள் வந்துள்ளதாகவும், வீடு மாறியதன் காரணமாகவே இந்தச் சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுவர்களின் உடல்கள் இன்று (12) பிற்பகல் அவர்களின் உறவினர் வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரு சிறுவர்களின் உயிரைப் பறித்த இச்சம்பவம் குறித்துத் தான் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அன்றே (Marc-André Franche) தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறான வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய தரப்பினர் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் தனது 'எக்ஸ்' பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையிலுள்ள வீடொன்றின் மீது நேற்று (11) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இரு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
அவர்களின் தந்தை பலத்த காயமடைந்து களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை நடத்திவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி, நேற்று பாதுக்க, பஹள போபே பகுதியில் கைவிடப்பட்டுக் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இருப்பினும், சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இதேவேளை, இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் இலக்கு மாறியே நடத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை சந்தேகிக்கிறது.
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிள்ளைகளின் தந்தையின் சகோதரரது வீட்டை இலக்கு வைத்தே அவர்கள் வந்துள்ளதாகவும், வீடு மாறியதன் காரணமாகவே இந்தச் சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுவர்களின் உடல்கள் இன்று (12) பிற்பகல் அவர்களின் உறவினர் வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் பரபரப்பு: விபத்தில் சிக்கிய அஜித்குமாரின் சிற்றூந்து!
Local
12 September 2026
"திருட வேண்டாம் என்று அன்றே தந்தை சொல்லியிருக்க வேண்டும்" - ஜனாதிபதி அநுர!
Local
12 September 2026
"இரும்பு கம்பிகளுக்கு மத்தியிலும் உங்களை நான் பார்க்கிறேன்” சிறையிலிருந்து நாமல் செய்தி!
Local
12 September 2026
கம்பஹாவில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!
Local
12 September 2026
லண்டனில் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் விஜய்!
Local
12 September 2026
தெஹிவளை கைக்குண்டு வீச்சில் இரு சிறுவர்கள் பலியானமை தொடர்பில் ஐ.நா கவலை!
Local
12 September 2026
லண்டனில் அஜித் - விஜய் நெகிழ்ச்சி சந்திப்பு: ஆரத்தழுவி வாழ்த்து!
Local
12 September 2026
“ஈழம் கேட்க மாட்டேன் - 2029இல் நாமல் ஜனாதிபதியாவது உறுதி" - மொட்டு மேடையில் அர்ச்சுனா பேச்சு!
Local
12 September 2026
மரண தண்டனை குறித்து இன்னும் தீர்மானம் இல்லை: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவினருக்கு மன்னிப்பே கிடையாது - ஜனாதிபதி
Local
12 September 2026
நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக கம்சி குணரட்னம் நியமனம்
Local
12 September 2026