தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், குடும்பப் பின்னணியைப் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எச்சரித்துள்ளார்.
பொலன்னறுவையில் இன்று (12) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
ராஜபக்ஷ குடும்பத்தினர் மற்றும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் பற்றிப் பேசிய ஜனாதிபதி, "இப்போது வந்து அழுவதை விட்டுவிட்டு, திருட வேண்டாம் என்று அன்றே தந்தை, மகனுக்கு சொல்லியிருக்க வேண்டும்.
தாயாக இருந்தாலும் சரி, பாட்டியாக இருந்தாலும் சரி, சட்டம் அனைவருக்கும் சமமாகவே பிரயோகிக்கப்படும்.
பொதுப் பணத்தைக் கொள்ளையடித்த எவர் மீதும் எமக்கு எந்த இரக்கமும் இல்லை" எனக் காரசாரமாகத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அனுராதபுரத்தில் நடத்தப்பட்ட பேரணியை விமர்சித்த ஜனாதிபதி, "ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வரும் பலரை அந்தப் பேரணியில் ஒரே இடத்தில் காண முடியும். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அங்கு சென்றால் அனைவரையும் ஒரே இடத்தில் கைது செய்ய முடியும்" எனக் குறிப்பிட்டார்.
அனுராதபுரப் பேரணியானது மக்கள் நலனுக்காக நடத்தப்படவில்லை என்றும், குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நபர்கள் சட்டத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவே அதனை நடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
Latest News
சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் பரபரப்பு: விபத்தில் சிக்கிய அஜித்குமாரின் சிற்றூந்து!
"திருட வேண்டாம் என்று அன்றே தந்தை சொல்லியிருக்க வேண்டும்" - ஜனாதிபதி அநுர!
"இரும்பு கம்பிகளுக்கு மத்தியிலும் உங்களை நான் பார்க்கிறேன்” சிறையிலிருந்து நாமல் செய்தி!
கம்பஹாவில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!
லண்டனில் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் விஜய்!
தெஹிவளை கைக்குண்டு வீச்சில் இரு சிறுவர்கள் பலியானமை தொடர்பில் ஐ.நா கவலை!
லண்டனில் அஜித் - விஜய் நெகிழ்ச்சி சந்திப்பு: ஆரத்தழுவி வாழ்த்து!
“ஈழம் கேட்க மாட்டேன் - 2029இல் நாமல் ஜனாதிபதியாவது உறுதி" - மொட்டு மேடையில் அர்ச்சுனா பேச்சு!
மரண தண்டனை குறித்து இன்னும் தீர்மானம் இல்லை: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவினருக்கு மன்னிப்பே கிடையாது - ஜனாதிபதி
நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக கம்சி குணரட்னம் நியமனம்