General13 September 2026

ஊழல்வாதிகளை பாதுகாக்கும் "பிற்போக்கு சிந்தனை” கொண்ட சிறிய குழுவே எஞ்சியுள்ளது- ஜனாதிபதி

நாட்டில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகளுக்கு தண்டனை வழங்கக் கூடாது எனக் கூறி, திருடர்களைப் பாதுகாப்பதற்கு முயற்சிக்கும் சிறியதொரு பிற்போக்குத்தனமான சிந்தனை கொண்ட குழுவே சமூகத்தில் எஞ்சியுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் - கஹட்டகஸ்திஹிலிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டார்.

"இத்தகைய சிந்தனை கொண்ட சிறியதொரு குழுவையே அனுராதபுரத்தில் நேற்றைய தினம் நாம் கண்டோம்.

'திருடினாலும் பரவாயில்லை, சிறைக்கு அனுப்ப வேண்டாம்' என்றும், 'எங்கள் திருடன் எங்களுக்குப் போதும்' என்றும் கூறிக்கொண்டு கைதட்டி ஊழல்வாதிகளுக்குப் பின்னால் செல்லும் பிற்போக்குத்தனமான சிந்தனை கொண்ட குழுவினர் நாட்டிலேயே மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்.

ஊழல்வாதிகளுக்கும் மோசடி செய்பவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டாம் எனக் கூறுபவர்கள் எங்குமே ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள்.

அரசாங்கம் என்ற ரீதியில், சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தி மோசடிக்காரர்கள், ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வழங்குவதற்கான வலுவான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது" என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes