கடந்த மாதம் அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இலங்கை கடற்படைக்கு சொந்தமான 'P 4447' என்ற அதிவேக தாக்குதல் படகு, சிக்கலான நடவடிக்கைக்குப் பின்னர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் 15ஆம் திகதி வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த படகு விபத்துக்குள்ளாகி, சுமார் 80 அடி ஆழத்தில் மூழ்கியது.
இதனைத் தொடர்ந்து, கடற்படை, விமானப்படை, காவல்துறை மற்றும் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் மூலம் படகில் இருந்த 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பலனாக, விபத்தையடுத்து காணாமல் போயிருந்த படகின் இரண்டாம் நிலை அதிகாரி கடந்த 4ஆம் திகதி உடலமாக மீட்கப்பட்டார்.
இதன் மூலம் மீட்புப் பணியின் முதற்கட்டம் நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து, கொந்தளிப்பான கடல் அலைகள் மற்றும் சவாலான கடல் அடி சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், கடற்படையின் விசேட பிரிவினர் படகை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
பொறியியல், மின்சார மற்றும் இலத்திரனியல் துறை சார்ந்த நிபுணர்களின் ஒருங்கிணைப்பில், விசேட சாதனங்களைப் பயன்படுத்தி கடந்த 11ஆம் திகதி படகு கடலின் மேற்பகுதிக்குக் கொண்டுவரப்பட்டது.
பின்னர், அந்தப் படகு கொழும்பு துறைமுக கப்பற்துறை வளாகத்துக்கு பாதுகாப்பாக இழுத்து வரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் 15ஆம் திகதி வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த படகு விபத்துக்குள்ளாகி, சுமார் 80 அடி ஆழத்தில் மூழ்கியது.
இதனைத் தொடர்ந்து, கடற்படை, விமானப்படை, காவல்துறை மற்றும் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் மூலம் படகில் இருந்த 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பலனாக, விபத்தையடுத்து காணாமல் போயிருந்த படகின் இரண்டாம் நிலை அதிகாரி கடந்த 4ஆம் திகதி உடலமாக மீட்கப்பட்டார்.
இதன் மூலம் மீட்புப் பணியின் முதற்கட்டம் நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து, கொந்தளிப்பான கடல் அலைகள் மற்றும் சவாலான கடல் அடி சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், கடற்படையின் விசேட பிரிவினர் படகை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
பொறியியல், மின்சார மற்றும் இலத்திரனியல் துறை சார்ந்த நிபுணர்களின் ஒருங்கிணைப்பில், விசேட சாதனங்களைப் பயன்படுத்தி கடந்த 11ஆம் திகதி படகு கடலின் மேற்பகுதிக்குக் கொண்டுவரப்பட்டது.
பின்னர், அந்தப் படகு கொழும்பு துறைமுக கப்பற்துறை வளாகத்துக்கு பாதுகாப்பாக இழுத்து வரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
Latest News
களுத்துறையில் தொடருந்து மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!
Local
16 September 2026
வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு : இறுதி கெடு அறிவிப்பு - தவறினால் அபராதம் மற்றும் வட்டி!
Local
16 September 2026
ஜப்பானில் 100 வயதைக் கடந்த முதியவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்து சாதனை!
Local
16 September 2026
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள்!
Local
16 September 2026
ஈரான் வெளியுறவு அமைச்சர் பெய்ஜிங் பயணம்: சமரசத் தூதராகப் செயல்படுமா சீனா?
Local
16 September 2026
முதல் இருபதுக்கு 20 போட்டி: இங்கிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
Local
16 September 2026
இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசனை
Local
16 September 2026
அஞ்சல் மூல வாக்களிப்பு கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!
Local
16 September 2026
ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இருபதுக்கு 20 தொடரை வென்றது இந்தியா: டெல்லி போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடி!
Local
16 September 2026
நடிகர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் அறிக்கை: த.வெ.க வினருக்குக் கடும் கண்டனம்!
Local
16 September 2026