கடந்த மாதம் அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இலங்கை கடற்படைக்கு சொந்தமான 'P 4447' என்ற அதிவேக தாக்குதல் படகு, சிக்கலான நடவடிக்கைக்குப் பின்னர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் 15ஆம் திகதி வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த படகு விபத்துக்குள்ளாகி, சுமார் 80 அடி ஆழத்தில் மூழ்கியது.
இதனைத் தொடர்ந்து, கடற்படை, விமானப்படை, காவல்துறை மற்றும் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் மூலம் படகில் இருந்த 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பலனாக, விபத்தையடுத்து காணாமல் போயிருந்த படகின் இரண்டாம் நிலை அதிகாரி கடந்த 4ஆம் திகதி உடலமாக மீட்கப்பட்டார்.
இதன் மூலம் மீட்புப் பணியின் முதற்கட்டம் நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து, கொந்தளிப்பான கடல் அலைகள் மற்றும் சவாலான கடல் அடி சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், கடற்படையின் விசேட பிரிவினர் படகை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
பொறியியல், மின்சார மற்றும் இலத்திரனியல் துறை சார்ந்த நிபுணர்களின் ஒருங்கிணைப்பில், விசேட சாதனங்களைப் பயன்படுத்தி கடந்த 11ஆம் திகதி படகு கடலின் மேற்பகுதிக்குக் கொண்டுவரப்பட்டது.
பின்னர், அந்தப் படகு கொழும்பு துறைமுக கப்பற்துறை வளாகத்துக்கு பாதுகாப்பாக இழுத்து வரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் 15ஆம் திகதி வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த படகு விபத்துக்குள்ளாகி, சுமார் 80 அடி ஆழத்தில் மூழ்கியது.
இதனைத் தொடர்ந்து, கடற்படை, விமானப்படை, காவல்துறை மற்றும் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் மூலம் படகில் இருந்த 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பலனாக, விபத்தையடுத்து காணாமல் போயிருந்த படகின் இரண்டாம் நிலை அதிகாரி கடந்த 4ஆம் திகதி உடலமாக மீட்கப்பட்டார்.
இதன் மூலம் மீட்புப் பணியின் முதற்கட்டம் நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து, கொந்தளிப்பான கடல் அலைகள் மற்றும் சவாலான கடல் அடி சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், கடற்படையின் விசேட பிரிவினர் படகை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
பொறியியல், மின்சார மற்றும் இலத்திரனியல் துறை சார்ந்த நிபுணர்களின் ஒருங்கிணைப்பில், விசேட சாதனங்களைப் பயன்படுத்தி கடந்த 11ஆம் திகதி படகு கடலின் மேற்பகுதிக்குக் கொண்டுவரப்பட்டது.
பின்னர், அந்தப் படகு கொழும்பு துறைமுக கப்பற்துறை வளாகத்துக்கு பாதுகாப்பாக இழுத்து வரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
Latest News
இலங்கையில் 2026 ‘EducationUSA’ பல்கலைக்கழகக் கண்காட்சி: கொழும்பு, குருநாகல் மற்றும் கண்டியில் நடைபெறுகிறது
Local
14 September 2026
பாடப்புத்தகங்களுக்கான VAT வரி நீக்கம் மற்றும் 1.21 லட்சம் பேருக்கு அரசு வேலை வாய்ப்பு: ஜனாதிபதி அறிவிப்பு
Local
14 September 2026
இன்று 6 மாகாணங்களில் 100 மி.மீ.க்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்
Local
14 September 2026
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர ஆலோசனை!
Local
14 September 2026
அமெரிக்காவில் தட்டம்மையால் பெண் பலி: இந்த ஆண்டில் 3-வது உயிரிழப்பு
Local
14 September 2026
மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி: பரிசளிப்பு நிகழ்வில் சர்ச்சை; கிண்ணத்தை பெற மறுத்த இந்திய அணி
Local
14 September 2026
சொந்த மண்ணில் ஏமாற்றம் அடைந்த பென் ஷெல்டன்: அமெரிக்க ஓபன் கோப்பையைக் தட்டிச் சென்ற ஸ்வரேவ்!
Local
14 September 2026
அந்நியச் செலாவணியை சேமிக்க அதிரடி நடவடிக்கை! இலங்கையில் தொடங்கும் பிரம்மாண்ட சூரிய மின்சக்தி திட்டம் !
Local
14 September 2026
ஏழையாக இறப்பது உன் தவறு – வாழ்க்கையில் முன்னேறுவது குறித்து நடிகர் கருணாஸ் கருத்து!
Local
14 September 2026
“திருடர்களைப் பிடிப்பதில் எல்லை எதுவும் இல்லை: எஞ்சிய பதவி காலத்தில் சகலருக்கும் தண்டனை!”
Local
14 September 2026