இலங்கையின் தேசிய மின்சார அமைப்பில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் 300 மெகாவாட் (MW) மின்சாரத்தைச் சேர்க்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் சூரிய மின்சக்தி திட்ட வரிசையில், முதலாவது திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை தேசிய மின்சார அமைப்பில் இணைக்கும் தொடக்க விழா, துறைமுகங்கள், சிவில் வானுார்தி போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தலைமையில் நேற்று (13) காலை வேயங்கொடையில் நடைபெற்றது.
இலங்கை முழுவதும் செயல்படுத்தப்படவுள்ள 300 மெகாவாட் கொள்ளளவு கொண்ட தரைவழி சூரிய மின்சக்தி (ground-mounted solar) திட்டங்களில், முதன்முதலாக தேசிய மின்சார அமைப்பில் இணைக்கப்படும் திட்டம் இதுவாகும்.
இந்த திட்டத்தின் மூலம் 3 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதுடன், இதனை 'ஹேலிஸ் ஃபென்டன்ஸ் லிமிடெட்' (Hayleys Fentons Limited) நிறுவனம் செயல்படுத்துகிறது.
எரிசக்தி அமைச்சகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அமைப்புகளால் இந்த திட்டம் கண்காணிக்கப்படுவதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் தனியார் துறையின் பங்கேற்புடன் இதுபோன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களைச் செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க, புதைபடிவ எரிபொருட்களுக்காக (fossil fuels) ஆண்டுதோறும் அதிக அளவிலான அந்நியச் செலாவணி நாட்டிலிருந்து வெளியேறுவதால், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை மேம்படுத்துவதன் மூலம் அந்த அந்நியச் செலாவணியை நாட்டிற்குள் சேமிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய திட்டங்கள் ஒரு முதலீடாகவும், அதேவேளையில் பொதுமக்களுக்கான சேவையாகவும் செயல்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Latest News
வேகமாக உருகும் இமயமலை பனிப்பாறைகள்: பேராபத்தில் தெற்காசிய பிராந்தியம்! - ஆய்வில் தகவல்
Local
14 September 2026
இலங்கை - தாய்லாந்து இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து : சட்டபூர்வ பாதுகாப்புடன் 10,000 வேலைவாய்ப்புகள்
Local
14 September 2026
லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.11,000 கோடி முதலீடு – 7000 பேருக்கு வேலைவாய்ப்பு!
Local
14 September 2026
விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது
Local
14 September 2026
எல் நினோ அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை தயாரா? - அணுகுமுறையை மாற்றுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு
Local
14 September 2026
அளுத்கமவில் விளாம்பழம் என நினைத்து கூரையை பார்த்த பெண்ணுக்கு பேரதிர்ச்சி
Local
14 September 2026
தேசிய மக்கள் சக்தியின் தொடர் பேரணிகளுக்கான காரணம் என்ன? - பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன விளக்கம்
Local
14 September 2026
செம்மணி ஆய்வில் சர்வதேச உதவி - விசாரணையில் சர்வதேச தரம்: இலங்கையை வலியுறுத்தும் பிரித்தானியா!
Local
14 September 2026
உண்மையான மீனைப் போல நீந்தும் ரோபோ மீன் – சீனாவில் அறிமுகம்!
Local
14 September 2026
எரிபொருள் விலை திருத்தம் குறித்து அமைச்சர் தகவல்!
Local
14 September 2026