தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்துள்ள போதிலும், அரச அதிகாரம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பேரணியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 159 பெரும்பான்மை இடங்களைப் பெற்று, ஜனாதிபதியை நியமித்து, உள்ளூராட்சி மன்றங்களின் ஆதரவைப் பெற்ற பின்னரும் கட்சி ஏன் தொடர்ந்து மக்கள் பேரணிகளை நடத்தி வருகிறது என்று சிலர் யோசிக்கலாம் எனச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.
நாம் ஏன் இவ்வாறு செய்கிறோம்? நமக்கு என்ன வகையான அதிகாரம் கிடைத்துள்ளது? நமக்கு ஆட்சிஅதிகாரம் மட்டுமே கிடைத்துள்ளது.
அரச அதிகாரம் என்று இன்னுமொரு பகுதி உள்ளது. இந்த அதிகாரம் நீங்கள் வாக்களிப்பதன் மூலம் பெறக்கூடிய ஒன்றல்ல.
அரச அதிகாரம் என்பது அரச கட்டமைப்பு மற்றும் நிர்வாக அமைப்பின் ஊடாக முன்னேறிச் செல்வதாகும்.
அரசாங்க திட்டங்கள் அரச அதிகாரத்தின் மூலமே செயற்படுத்தப்படுகின்றன. அரச அதிகாரத்தை ஒரே நாளில் பெற முடியாது.
அதைப் பெறுவதற்கு காலம் எடுக்கும் இது நிர்வாகத்திற்கான காலகட்டம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரம் மற்றும் அரச அதிகாரத்தை எவ்வாறு பெற முடியும் என்பது குறித்து மேலும் விளக்கிய பிரதியமைச்சர், 1988/89 ஆம் ஆண்டுகளில் ஆட்சி அதிகாரமும் அரச அதிகாரமும் வன்முறை மூலமே கைப்பற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், உலக வரலாற்றில் முதல்முறையாக ஆட்சி அதிகாரம் மற்றும் அரச அதிகாரம் ஆகிய இரண்டும் ஜனநாயக வழியில் பெறப்பட்டு வருகின்றன.
இதிலிருந்து கற்றுக்கொள்வதற்கு முன்மாதிரிகள் எதுவும் இல்லை. தேசிய மக்கள் சக்தியைத் தவிர, உலகில் வேறு எந்த அரசியல் கட்சியும் இந்த வழியில் அதிகாரத்தைப் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனநாயக வழியில் அதிகாரத்தைப் பெற்று, இலங்கையை அபிவிருத்தி செய்வதை நோக்கி தேசிய மக்கள் சக்தி செயற்பட்டு வருகிறது என்பதை உலகிற்கு தெரியப்படுத்துவது அவசியமானது என்றும், அதனாலேயே கட்சி தொடர்ந்து மக்கள் பேரணிகளை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பேரணியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 159 பெரும்பான்மை இடங்களைப் பெற்று, ஜனாதிபதியை நியமித்து, உள்ளூராட்சி மன்றங்களின் ஆதரவைப் பெற்ற பின்னரும் கட்சி ஏன் தொடர்ந்து மக்கள் பேரணிகளை நடத்தி வருகிறது என்று சிலர் யோசிக்கலாம் எனச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.
நாம் ஏன் இவ்வாறு செய்கிறோம்? நமக்கு என்ன வகையான அதிகாரம் கிடைத்துள்ளது? நமக்கு ஆட்சிஅதிகாரம் மட்டுமே கிடைத்துள்ளது.
அரச அதிகாரம் என்று இன்னுமொரு பகுதி உள்ளது. இந்த அதிகாரம் நீங்கள் வாக்களிப்பதன் மூலம் பெறக்கூடிய ஒன்றல்ல.
அரச அதிகாரம் என்பது அரச கட்டமைப்பு மற்றும் நிர்வாக அமைப்பின் ஊடாக முன்னேறிச் செல்வதாகும்.
அரசாங்க திட்டங்கள் அரச அதிகாரத்தின் மூலமே செயற்படுத்தப்படுகின்றன. அரச அதிகாரத்தை ஒரே நாளில் பெற முடியாது.
அதைப் பெறுவதற்கு காலம் எடுக்கும் இது நிர்வாகத்திற்கான காலகட்டம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரம் மற்றும் அரச அதிகாரத்தை எவ்வாறு பெற முடியும் என்பது குறித்து மேலும் விளக்கிய பிரதியமைச்சர், 1988/89 ஆம் ஆண்டுகளில் ஆட்சி அதிகாரமும் அரச அதிகாரமும் வன்முறை மூலமே கைப்பற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், உலக வரலாற்றில் முதல்முறையாக ஆட்சி அதிகாரம் மற்றும் அரச அதிகாரம் ஆகிய இரண்டும் ஜனநாயக வழியில் பெறப்பட்டு வருகின்றன.
இதிலிருந்து கற்றுக்கொள்வதற்கு முன்மாதிரிகள் எதுவும் இல்லை. தேசிய மக்கள் சக்தியைத் தவிர, உலகில் வேறு எந்த அரசியல் கட்சியும் இந்த வழியில் அதிகாரத்தைப் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனநாயக வழியில் அதிகாரத்தைப் பெற்று, இலங்கையை அபிவிருத்தி செய்வதை நோக்கி தேசிய மக்கள் சக்தி செயற்பட்டு வருகிறது என்பதை உலகிற்கு தெரியப்படுத்துவது அவசியமானது என்றும், அதனாலேயே கட்சி தொடர்ந்து மக்கள் பேரணிகளை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Latest News
க.பொ.த சாதாரண தர பாடங்களின் எண்ணிக்கை 7 ஆகக் குறைப்பு:பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்!
Local
14 September 2026
குருநாகல் - மஹவ பகுதியில் தீ விபத்து: கணினி நிலையத்திற்குள் நேர்ந்த பெரும் சேதம்!
Local
14 September 2026
வெனிஸ் விழாவில் விருது பெற்ற ஆவணப்படம்: சொந்த நாட்டு இயக்குநர்கள் மீது பாயும் ‘தேசதுரோக’ குற்றம்!
Local
14 September 2026
மாணவர்களின் ஆரோக்கியத்திற்காக இங்கிலாந்து அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை!
Local
14 September 2026
அர்ச்சுனாவுக்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு!
Local
14 September 2026
வேகமாக உருகும் இமயமலை பனிப்பாறைகள்: பேராபத்தில் தெற்காசிய பிராந்தியம்! - ஆய்வில் தகவல்
Local
14 September 2026
இலங்கை - தாய்லாந்து இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து : சட்டபூர்வ பாதுகாப்புடன் 10,000 வேலைவாய்ப்புகள்
Local
14 September 2026
லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.11,000 கோடி முதலீடு – 7000 பேருக்கு வேலைவாய்ப்பு!
Local
14 September 2026
விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது
Local
14 September 2026
எல் நினோ அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை தயாரா? - அணுகுமுறையை மாற்றுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு
Local
14 September 2026