உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இந்த மாத இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
சில எரிபொருள் விநியோக நிறுவனங்கள் சந்தித்து வரும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று (14) பதிலளித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், உள்நாட்டுச் சந்தையில் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக, தற்போதைய நிலையில் விநியோகத்தை முன்னெடுத்துச் செல்வது சவாலாக அமைந்துள்ளதாக பல தனியார் எரிபொருள் நிறுவனங்கள் அரசாங்கத்துக்குத் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி விரைவில் உரிய தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண, கடந்த காலங்களைப் போல எரிபொருள் மானியம் வழங்குவது அல்லது முறையான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
தனியார் நிறுவனங்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்த போதிலும், நுகர்வோரின் நலனைக் கருத்திற்கொண்டே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும், சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து இந்த மாத இறுதியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சில எரிபொருள் விநியோக நிறுவனங்கள் சந்தித்து வரும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று (14) பதிலளித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், உள்நாட்டுச் சந்தையில் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக, தற்போதைய நிலையில் விநியோகத்தை முன்னெடுத்துச் செல்வது சவாலாக அமைந்துள்ளதாக பல தனியார் எரிபொருள் நிறுவனங்கள் அரசாங்கத்துக்குத் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி விரைவில் உரிய தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண, கடந்த காலங்களைப் போல எரிபொருள் மானியம் வழங்குவது அல்லது முறையான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
தனியார் நிறுவனங்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்த போதிலும், நுகர்வோரின் நலனைக் கருத்திற்கொண்டே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும், சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து இந்த மாத இறுதியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Latest News
குருநாகல் - மஹவ பகுதியில் தீ விபத்து: கணினி நிலையத்திற்குள் நேர்ந்த பெரும் சேதம்!
Local
14 September 2026
வெனிஸ் விழாவில் விருது பெற்ற ஆவணப்படம்: சொந்த நாட்டு இயக்குநர்கள் மீது பாயும் ‘தேசதுரோக’ குற்றம்!
Local
14 September 2026
மாணவர்களின் ஆரோக்கியத்திற்காக இங்கிலாந்து அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை!
Local
14 September 2026
அர்ச்சுனாவுக்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு!
Local
14 September 2026
வேகமாக உருகும் இமயமலை பனிப்பாறைகள்: பேராபத்தில் தெற்காசிய பிராந்தியம்! - ஆய்வில் தகவல்
Local
14 September 2026
இலங்கை - தாய்லாந்து இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து : சட்டபூர்வ பாதுகாப்புடன் 10,000 வேலைவாய்ப்புகள்
Local
14 September 2026
லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.11,000 கோடி முதலீடு – 7000 பேருக்கு வேலைவாய்ப்பு!
Local
14 September 2026
விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது
Local
14 September 2026
எல் நினோ அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை தயாரா? - அணுகுமுறையை மாற்றுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு
Local
14 September 2026
அளுத்கமவில் விளாம்பழம் என நினைத்து கூரையை பார்த்த பெண்ணுக்கு பேரதிர்ச்சி
Local
14 September 2026