உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இந்த மாத இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
சில எரிபொருள் விநியோக நிறுவனங்கள் சந்தித்து வரும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று (14) பதிலளித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், உள்நாட்டுச் சந்தையில் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக, தற்போதைய நிலையில் விநியோகத்தை முன்னெடுத்துச் செல்வது சவாலாக அமைந்துள்ளதாக பல தனியார் எரிபொருள் நிறுவனங்கள் அரசாங்கத்துக்குத் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி விரைவில் உரிய தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண, கடந்த காலங்களைப் போல எரிபொருள் மானியம் வழங்குவது அல்லது முறையான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
தனியார் நிறுவனங்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்த போதிலும், நுகர்வோரின் நலனைக் கருத்திற்கொண்டே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும், சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து இந்த மாத இறுதியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சில எரிபொருள் விநியோக நிறுவனங்கள் சந்தித்து வரும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று (14) பதிலளித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், உள்நாட்டுச் சந்தையில் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக, தற்போதைய நிலையில் விநியோகத்தை முன்னெடுத்துச் செல்வது சவாலாக அமைந்துள்ளதாக பல தனியார் எரிபொருள் நிறுவனங்கள் அரசாங்கத்துக்குத் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி விரைவில் உரிய தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண, கடந்த காலங்களைப் போல எரிபொருள் மானியம் வழங்குவது அல்லது முறையான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
தனியார் நிறுவனங்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்த போதிலும், நுகர்வோரின் நலனைக் கருத்திற்கொண்டே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும், சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து இந்த மாத இறுதியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Latest News
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் ஷிராந்தி ராஜபக்ச சிங்கப்பூர் பயணம்
Local
16 September 2026
எல் நினோ தாக்கம் : அடுத்த 2 மாதங்களில் இலங்கைக்கு காத்திருக்கும் மிகப்பெரிய காலநிலை மாற்றம்!
Local
16 September 2026
மீண்டும் டெங்கு தலைதூக்கலாம் -விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Local
16 September 2026
மெக்காவை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஆளில்லா வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது : சவூதி கூட்டுப்படை விளக்கம்!
Local
16 September 2026
களுத்துறையில் தொடருந்து மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!
Local
16 September 2026
வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு : இறுதி கெடு அறிவிப்பு - தவறினால் அபராதம் மற்றும் வட்டி!
Local
16 September 2026
ஜப்பானில் 100 வயதைக் கடந்த முதியவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்து சாதனை!
Local
16 September 2026
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள்!
Local
16 September 2026
ஈரான் வெளியுறவு அமைச்சர் பெய்ஜிங் பயணம்: சமரசத் தூதராகப் செயல்படுமா சீனா?
Local
16 September 2026
முதல் இருபதுக்கு 20 போட்டி: இங்கிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
Local
16 September 2026