உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இந்த மாத இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
சில எரிபொருள் விநியோக நிறுவனங்கள் சந்தித்து வரும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று (14) பதிலளித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், உள்நாட்டுச் சந்தையில் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக, தற்போதைய நிலையில் விநியோகத்தை முன்னெடுத்துச் செல்வது சவாலாக அமைந்துள்ளதாக பல தனியார் எரிபொருள் நிறுவனங்கள் அரசாங்கத்துக்குத் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி விரைவில் உரிய தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண, கடந்த காலங்களைப் போல எரிபொருள் மானியம் வழங்குவது அல்லது முறையான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
தனியார் நிறுவனங்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்த போதிலும், நுகர்வோரின் நலனைக் கருத்திற்கொண்டே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும், சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து இந்த மாத இறுதியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சில எரிபொருள் விநியோக நிறுவனங்கள் சந்தித்து வரும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று (14) பதிலளித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், உள்நாட்டுச் சந்தையில் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக, தற்போதைய நிலையில் விநியோகத்தை முன்னெடுத்துச் செல்வது சவாலாக அமைந்துள்ளதாக பல தனியார் எரிபொருள் நிறுவனங்கள் அரசாங்கத்துக்குத் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி விரைவில் உரிய தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண, கடந்த காலங்களைப் போல எரிபொருள் மானியம் வழங்குவது அல்லது முறையான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
தனியார் நிறுவனங்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்த போதிலும், நுகர்வோரின் நலனைக் கருத்திற்கொண்டே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும், சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து இந்த மாத இறுதியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Latest News
ருமேஷ் தரங்கவின் ஈட்டிகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து வானூர்தி நிறுவனத்திடம் விசாரணை
Local
16 September 2026
எயார்பஸ் நிதி முறைகேடு - நாமல் ராஜபக்ஷ கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை!
Local
16 September 2026
இலங்கை - தாய்லாந்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணக்கம் : விசா விலக்கு தொடர்பிலும் கவனம்!
Local
16 September 2026
சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களால் சுகாதார அபாயம்: பாகிஸ்தான் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் தடை
Local
16 September 2026
இந்திய மதிப்பில் ரூ.100 கோடி மோசடி வழக்கு: தமிழக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு சொந்தமான இடங்களில் சோதனை
Local
16 September 2026
20 வருட காதல் பயணம் : மீண்டும் ஒருமுறை திருமண பந்தத்தில் இணைந்த சூர்யா - ஜோதிகா!
Local
16 September 2026
நாட்டில் கடந்த ஆண்டில் வேலையின்மை விகிதம் 3.9 வீதமாகப் பதிவு
Local
16 September 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
Local
16 September 2026
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு ஒக்டோபருக்கு ஒத்திவைப்பு!
Local
16 September 2026
கலகொடஅத்தே ஞானசார தேரரின் வழக்கு மீண்டும் இந்த மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
Local
16 September 2026