தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்துள்ள போதிலும், அரச அதிகாரம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பேரணியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 159 பெரும்பான்மை இடங்களைப் பெற்று, ஜனாதிபதியை நியமித்து, உள்ளூராட்சி மன்றங்களின் ஆதரவைப் பெற்ற பின்னரும் கட்சி ஏன் தொடர்ந்து மக்கள் பேரணிகளை நடத்தி வருகிறது என்று சிலர் யோசிக்கலாம் எனச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.
நாம் ஏன் இவ்வாறு செய்கிறோம்? நமக்கு என்ன வகையான அதிகாரம் கிடைத்துள்ளது? நமக்கு ஆட்சிஅதிகாரம் மட்டுமே கிடைத்துள்ளது.
அரச அதிகாரம் என்று இன்னுமொரு பகுதி உள்ளது. இந்த அதிகாரம் நீங்கள் வாக்களிப்பதன் மூலம் பெறக்கூடிய ஒன்றல்ல.
அரச அதிகாரம் என்பது அரச கட்டமைப்பு மற்றும் நிர்வாக அமைப்பின் ஊடாக முன்னேறிச் செல்வதாகும்.
அரசாங்க திட்டங்கள் அரச அதிகாரத்தின் மூலமே செயற்படுத்தப்படுகின்றன. அரச அதிகாரத்தை ஒரே நாளில் பெற முடியாது.
அதைப் பெறுவதற்கு காலம் எடுக்கும் இது நிர்வாகத்திற்கான காலகட்டம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரம் மற்றும் அரச அதிகாரத்தை எவ்வாறு பெற முடியும் என்பது குறித்து மேலும் விளக்கிய பிரதியமைச்சர், 1988/89 ஆம் ஆண்டுகளில் ஆட்சி அதிகாரமும் அரச அதிகாரமும் வன்முறை மூலமே கைப்பற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், உலக வரலாற்றில் முதல்முறையாக ஆட்சி அதிகாரம் மற்றும் அரச அதிகாரம் ஆகிய இரண்டும் ஜனநாயக வழியில் பெறப்பட்டு வருகின்றன.
இதிலிருந்து கற்றுக்கொள்வதற்கு முன்மாதிரிகள் எதுவும் இல்லை. தேசிய மக்கள் சக்தியைத் தவிர, உலகில் வேறு எந்த அரசியல் கட்சியும் இந்த வழியில் அதிகாரத்தைப் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனநாயக வழியில் அதிகாரத்தைப் பெற்று, இலங்கையை அபிவிருத்தி செய்வதை நோக்கி தேசிய மக்கள் சக்தி செயற்பட்டு வருகிறது என்பதை உலகிற்கு தெரியப்படுத்துவது அவசியமானது என்றும், அதனாலேயே கட்சி தொடர்ந்து மக்கள் பேரணிகளை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பேரணியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 159 பெரும்பான்மை இடங்களைப் பெற்று, ஜனாதிபதியை நியமித்து, உள்ளூராட்சி மன்றங்களின் ஆதரவைப் பெற்ற பின்னரும் கட்சி ஏன் தொடர்ந்து மக்கள் பேரணிகளை நடத்தி வருகிறது என்று சிலர் யோசிக்கலாம் எனச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.
நாம் ஏன் இவ்வாறு செய்கிறோம்? நமக்கு என்ன வகையான அதிகாரம் கிடைத்துள்ளது? நமக்கு ஆட்சிஅதிகாரம் மட்டுமே கிடைத்துள்ளது.
அரச அதிகாரம் என்று இன்னுமொரு பகுதி உள்ளது. இந்த அதிகாரம் நீங்கள் வாக்களிப்பதன் மூலம் பெறக்கூடிய ஒன்றல்ல.
அரச அதிகாரம் என்பது அரச கட்டமைப்பு மற்றும் நிர்வாக அமைப்பின் ஊடாக முன்னேறிச் செல்வதாகும்.
அரசாங்க திட்டங்கள் அரச அதிகாரத்தின் மூலமே செயற்படுத்தப்படுகின்றன. அரச அதிகாரத்தை ஒரே நாளில் பெற முடியாது.
அதைப் பெறுவதற்கு காலம் எடுக்கும் இது நிர்வாகத்திற்கான காலகட்டம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரம் மற்றும் அரச அதிகாரத்தை எவ்வாறு பெற முடியும் என்பது குறித்து மேலும் விளக்கிய பிரதியமைச்சர், 1988/89 ஆம் ஆண்டுகளில் ஆட்சி அதிகாரமும் அரச அதிகாரமும் வன்முறை மூலமே கைப்பற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், உலக வரலாற்றில் முதல்முறையாக ஆட்சி அதிகாரம் மற்றும் அரச அதிகாரம் ஆகிய இரண்டும் ஜனநாயக வழியில் பெறப்பட்டு வருகின்றன.
இதிலிருந்து கற்றுக்கொள்வதற்கு முன்மாதிரிகள் எதுவும் இல்லை. தேசிய மக்கள் சக்தியைத் தவிர, உலகில் வேறு எந்த அரசியல் கட்சியும் இந்த வழியில் அதிகாரத்தைப் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனநாயக வழியில் அதிகாரத்தைப் பெற்று, இலங்கையை அபிவிருத்தி செய்வதை நோக்கி தேசிய மக்கள் சக்தி செயற்பட்டு வருகிறது என்பதை உலகிற்கு தெரியப்படுத்துவது அவசியமானது என்றும், அதனாலேயே கட்சி தொடர்ந்து மக்கள் பேரணிகளை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Latest News
நேபாளத்தில் வெள்ளம், மண்சரிவால் மின் கட்டமைப்பு பாதிப்பு: அவசரகால மின்சாரம் வழங்க இந்தியா ஒப்புதல்!
Local
15 September 2026
ஆசிய விளையாட்டுப் போட்டி: பங்களாதேஷை 10-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வடகொரியா மகளிர் கால்பந்து அணி அபார வெற்றி!
Local
15 September 2026
அணுசக்தி சர்வதேச மாநாட்டில் பங்கேற்க ஈரானின் அணுசக்தித் தலைவருக்குத் தடை: அமெரிக்காவின் அழுத்தத்தால் விசாவை ரத்து செய்தது ஒஸ்திரியா!
Local
15 September 2026
போலந்து எல்லைக்கு அருகில் ரஷ்யா ஆளில்லா வானூர்தி தாக்குதலின் எதிரொலி: யுக்ரைனுக்குக் கூடுதல் ஆதரவு வழங்க நேட்டோ உறுதி!
Local
15 September 2026
இன்று பல மாகாணங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு
Local
15 September 2026
தென் செங்கடலில் உள்ள ஹனீஷ் தீவுகளை ஹூதிகள் கைப்பற்றினர்: சவுதி வான் படைத் தளத்தின் மீது தாக்குதல்!
Local
15 September 2026
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் ரூ.320 மில்லியன் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு
Local
15 September 2026
“பாகிஸ்தானுடன் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்”: ஆசியக் கிண்ண சர்ச்சைக்குப் பின் மதன் லால் கருத்து!
Local
15 September 2026
இங்கிலாந்திடம் 0-3 எனத் தொடரை இழந்த பாகிஸ்தானுக்கு ஐசிசி அபராதம்: WTC புள்ளிப் பட்டியலில் புள்ளிகள் குறைப்பு!
Local
15 September 2026
மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் AI பங்குச்சந்தை வீழ்ச்சி: ஆசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவு!
Local
15 September 2026