தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்துள்ள போதிலும், அரச அதிகாரம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பேரணியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 159 பெரும்பான்மை இடங்களைப் பெற்று, ஜனாதிபதியை நியமித்து, உள்ளூராட்சி மன்றங்களின் ஆதரவைப் பெற்ற பின்னரும் கட்சி ஏன் தொடர்ந்து மக்கள் பேரணிகளை நடத்தி வருகிறது என்று சிலர் யோசிக்கலாம் எனச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.
நாம் ஏன் இவ்வாறு செய்கிறோம்? நமக்கு என்ன வகையான அதிகாரம் கிடைத்துள்ளது? நமக்கு ஆட்சிஅதிகாரம் மட்டுமே கிடைத்துள்ளது.
அரச அதிகாரம் என்று இன்னுமொரு பகுதி உள்ளது. இந்த அதிகாரம் நீங்கள் வாக்களிப்பதன் மூலம் பெறக்கூடிய ஒன்றல்ல.
அரச அதிகாரம் என்பது அரச கட்டமைப்பு மற்றும் நிர்வாக அமைப்பின் ஊடாக முன்னேறிச் செல்வதாகும்.
அரசாங்க திட்டங்கள் அரச அதிகாரத்தின் மூலமே செயற்படுத்தப்படுகின்றன. அரச அதிகாரத்தை ஒரே நாளில் பெற முடியாது.
அதைப் பெறுவதற்கு காலம் எடுக்கும் இது நிர்வாகத்திற்கான காலகட்டம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரம் மற்றும் அரச அதிகாரத்தை எவ்வாறு பெற முடியும் என்பது குறித்து மேலும் விளக்கிய பிரதியமைச்சர், 1988/89 ஆம் ஆண்டுகளில் ஆட்சி அதிகாரமும் அரச அதிகாரமும் வன்முறை மூலமே கைப்பற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், உலக வரலாற்றில் முதல்முறையாக ஆட்சி அதிகாரம் மற்றும் அரச அதிகாரம் ஆகிய இரண்டும் ஜனநாயக வழியில் பெறப்பட்டு வருகின்றன.
இதிலிருந்து கற்றுக்கொள்வதற்கு முன்மாதிரிகள் எதுவும் இல்லை. தேசிய மக்கள் சக்தியைத் தவிர, உலகில் வேறு எந்த அரசியல் கட்சியும் இந்த வழியில் அதிகாரத்தைப் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனநாயக வழியில் அதிகாரத்தைப் பெற்று, இலங்கையை அபிவிருத்தி செய்வதை நோக்கி தேசிய மக்கள் சக்தி செயற்பட்டு வருகிறது என்பதை உலகிற்கு தெரியப்படுத்துவது அவசியமானது என்றும், அதனாலேயே கட்சி தொடர்ந்து மக்கள் பேரணிகளை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பேரணியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 159 பெரும்பான்மை இடங்களைப் பெற்று, ஜனாதிபதியை நியமித்து, உள்ளூராட்சி மன்றங்களின் ஆதரவைப் பெற்ற பின்னரும் கட்சி ஏன் தொடர்ந்து மக்கள் பேரணிகளை நடத்தி வருகிறது என்று சிலர் யோசிக்கலாம் எனச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.
நாம் ஏன் இவ்வாறு செய்கிறோம்? நமக்கு என்ன வகையான அதிகாரம் கிடைத்துள்ளது? நமக்கு ஆட்சிஅதிகாரம் மட்டுமே கிடைத்துள்ளது.
அரச அதிகாரம் என்று இன்னுமொரு பகுதி உள்ளது. இந்த அதிகாரம் நீங்கள் வாக்களிப்பதன் மூலம் பெறக்கூடிய ஒன்றல்ல.
அரச அதிகாரம் என்பது அரச கட்டமைப்பு மற்றும் நிர்வாக அமைப்பின் ஊடாக முன்னேறிச் செல்வதாகும்.
அரசாங்க திட்டங்கள் அரச அதிகாரத்தின் மூலமே செயற்படுத்தப்படுகின்றன. அரச அதிகாரத்தை ஒரே நாளில் பெற முடியாது.
அதைப் பெறுவதற்கு காலம் எடுக்கும் இது நிர்வாகத்திற்கான காலகட்டம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரம் மற்றும் அரச அதிகாரத்தை எவ்வாறு பெற முடியும் என்பது குறித்து மேலும் விளக்கிய பிரதியமைச்சர், 1988/89 ஆம் ஆண்டுகளில் ஆட்சி அதிகாரமும் அரச அதிகாரமும் வன்முறை மூலமே கைப்பற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், உலக வரலாற்றில் முதல்முறையாக ஆட்சி அதிகாரம் மற்றும் அரச அதிகாரம் ஆகிய இரண்டும் ஜனநாயக வழியில் பெறப்பட்டு வருகின்றன.
இதிலிருந்து கற்றுக்கொள்வதற்கு முன்மாதிரிகள் எதுவும் இல்லை. தேசிய மக்கள் சக்தியைத் தவிர, உலகில் வேறு எந்த அரசியல் கட்சியும் இந்த வழியில் அதிகாரத்தைப் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனநாயக வழியில் அதிகாரத்தைப் பெற்று, இலங்கையை அபிவிருத்தி செய்வதை நோக்கி தேசிய மக்கள் சக்தி செயற்பட்டு வருகிறது என்பதை உலகிற்கு தெரியப்படுத்துவது அவசியமானது என்றும், அதனாலேயே கட்சி தொடர்ந்து மக்கள் பேரணிகளை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Latest News
ஐபிஎல் ஏலத்தை மீண்டும் இந்தியாவில் நடத்த திட்டம்
Local
16 September 2026
இலங்கைத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் சர்வதேசக் கதவுகள் திறக்கப்பட வேண்டும் - சஜித்
Local
16 September 2026
அரவிந்த டி சில்வா மற்றும் மனைவிக்கு பிடியாணை!
Local
16 September 2026
எதிர்வரும் பத்து நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
Local
16 September 2026
எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்
Local
16 September 2026
நாட்டை விட்டு வெளியேற முயற்சியா? - சிரந்தி ராஜபக்ஷ விவகாரத்தில் வெளியான உண்மைப் பின்னணி!
Local
16 September 2026
ருமேஷ் தரங்கவின் ஈட்டிகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து வானூர்தி நிறுவனத்திடம் விசாரணை
Local
16 September 2026
எயார்பஸ் நிதி முறைகேடு - நாமல் ராஜபக்ஷ கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை!
Local
16 September 2026
இலங்கை - தாய்லாந்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணக்கம் : விசா விலக்கு தொடர்பிலும் கவனம்!
Local
16 September 2026
சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களால் சுகாதார அபாயம்: பாகிஸ்தான் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் தடை
Local
16 September 2026