பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (16) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தொடருந்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
பணிப்புறக்கணிப்பு போராட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாவதற்கு முன்னரே, காங்கேசன்துறை மற்றும் திருகோணமலைக்கான இரவுநேர அஞ்சல் தொடருந்து (Night Mail) மற்றும் மாலை நேர விரைவுத் தொடருந்து சேவைகள் உள்ளிட்ட பல தொலைதூரச் சேவைகளை தொடருந்து திணைக்களம் இரத்து செய்துள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், சில தொடருந்து சேவைகள் இலக்கை அடைவதற்கு முன்னரே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு போராட்டம் குறித்து 14 நாட்களுக்கு முன்னரே அறிவித்தல் வழங்கப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட அமைச்சரோ அல்லது அதிகாரிகளோ இதுவரை பேச்சுவார்த்த நடத்தி தீர்வு காணத் தவறிவிட்டதாக தொடருந்து இயந்திர இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சேனாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், தொடருந்து பொது முகாமையாளர் தலைமைத்துவம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், திணைக்களத்தில் நாளாந்தம் இயங்கும் தொடருந்து சேவைகளின் எண்ணிக்கை 450 இலிருந்து 184 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பருவகால பயணச்சீட்டு (Season tickets) விநியோகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
பணிப்புறக்கணிப்பு போராட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாவதற்கு முன்னரே, காங்கேசன்துறை மற்றும் திருகோணமலைக்கான இரவுநேர அஞ்சல் தொடருந்து (Night Mail) மற்றும் மாலை நேர விரைவுத் தொடருந்து சேவைகள் உள்ளிட்ட பல தொலைதூரச் சேவைகளை தொடருந்து திணைக்களம் இரத்து செய்துள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், சில தொடருந்து சேவைகள் இலக்கை அடைவதற்கு முன்னரே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு போராட்டம் குறித்து 14 நாட்களுக்கு முன்னரே அறிவித்தல் வழங்கப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட அமைச்சரோ அல்லது அதிகாரிகளோ இதுவரை பேச்சுவார்த்த நடத்தி தீர்வு காணத் தவறிவிட்டதாக தொடருந்து இயந்திர இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சேனாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், தொடருந்து பொது முகாமையாளர் தலைமைத்துவம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், திணைக்களத்தில் நாளாந்தம் இயங்கும் தொடருந்து சேவைகளின் எண்ணிக்கை 450 இலிருந்து 184 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பருவகால பயணச்சீட்டு (Season tickets) விநியோகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
Latest News
2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக வட்டி விகிதங்களை உயர்த்திய அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்!
Local
17 September 2026
இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு!
Local
16 September 2026
மட்டக்குளி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு: 12 பேர் மருத்துவமனையில்!
Local
16 September 2026
அதானியைப் பின் தள்ளி ஆசிய செல்வந்தர் பட்டியலில் டிக்டொக் நிறுவுனர் முதலிடம்!
Local
16 September 2026
திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மருத்துவமனைகளில் புதிய கட்டடங்களுக்கு ஜனாதிபதி அடிக்கல்
Local
16 September 2026
5 ஆவது மகளிர் பிரீமியர் லீக் (WPL): ஏலம் ஒக்டோபரில் - ஜனவரியில் தொடர் ஆரம்பம்!
Local
16 September 2026
கொசோவோ முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
Local
16 September 2026
மகனுக்காக ஒதுங்கிக்கொண்ட தளபதி: ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ் - வெளியான அதிரடி அறிவிப்பு
Local
16 September 2026
டிட்வா சூறாவளியை தொடர்ந்து 30,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்சரிவு அபாயத்தில்!
Local
16 September 2026
செப். 25 முதல் பொல்கொல்ல நீர்த்தேக்கம் வெறுமையாக்கப்படும்: கொத்மலை நீர்மின் உற்பத்தியும் இடைநிறுத்தம்!
Local
16 September 2026