பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (16) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தொடருந்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
பணிப்புறக்கணிப்பு போராட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாவதற்கு முன்னரே, காங்கேசன்துறை மற்றும் திருகோணமலைக்கான இரவுநேர அஞ்சல் தொடருந்து (Night Mail) மற்றும் மாலை நேர விரைவுத் தொடருந்து சேவைகள் உள்ளிட்ட பல தொலைதூரச் சேவைகளை தொடருந்து திணைக்களம் இரத்து செய்துள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், சில தொடருந்து சேவைகள் இலக்கை அடைவதற்கு முன்னரே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு போராட்டம் குறித்து 14 நாட்களுக்கு முன்னரே அறிவித்தல் வழங்கப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட அமைச்சரோ அல்லது அதிகாரிகளோ இதுவரை பேச்சுவார்த்த நடத்தி தீர்வு காணத் தவறிவிட்டதாக தொடருந்து இயந்திர இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சேனாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், தொடருந்து பொது முகாமையாளர் தலைமைத்துவம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், திணைக்களத்தில் நாளாந்தம் இயங்கும் தொடருந்து சேவைகளின் எண்ணிக்கை 450 இலிருந்து 184 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பருவகால பயணச்சீட்டு (Season tickets) விநியோகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
பணிப்புறக்கணிப்பு போராட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாவதற்கு முன்னரே, காங்கேசன்துறை மற்றும் திருகோணமலைக்கான இரவுநேர அஞ்சல் தொடருந்து (Night Mail) மற்றும் மாலை நேர விரைவுத் தொடருந்து சேவைகள் உள்ளிட்ட பல தொலைதூரச் சேவைகளை தொடருந்து திணைக்களம் இரத்து செய்துள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், சில தொடருந்து சேவைகள் இலக்கை அடைவதற்கு முன்னரே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு போராட்டம் குறித்து 14 நாட்களுக்கு முன்னரே அறிவித்தல் வழங்கப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட அமைச்சரோ அல்லது அதிகாரிகளோ இதுவரை பேச்சுவார்த்த நடத்தி தீர்வு காணத் தவறிவிட்டதாக தொடருந்து இயந்திர இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சேனாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், தொடருந்து பொது முகாமையாளர் தலைமைத்துவம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், திணைக்களத்தில் நாளாந்தம் இயங்கும் தொடருந்து சேவைகளின் எண்ணிக்கை 450 இலிருந்து 184 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பருவகால பயணச்சீட்டு (Season tickets) விநியோகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
Latest News
இங்கிலாந்து எதிர் இலங்கை: 2 ஆவது இருபதுக்கு 20 போட்டி: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!
Local
18 September 2026
சுவீடன் பொதுத்தேர்தல்: இடதுசாரி எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் உல்ஃப் கிறிஸ்ட்சன் பதவி விலகல்!
Local
18 September 2026
தென்னாப்பிரிக்காவில் தொடரும் கொடூரம்: ஜொஹன்னஸ்பர்க் புறநகரில் 9 ஆவது பெண்ணின் உடலம் மீட்பு!
Local
18 September 2026
பிரித்தானியப் படையினரால், எத்தியோப்பியாவில் சூறையாடப்பட்ட பழங்கால கோண்டாரை சுவிசேஷம்!
Local
18 September 2026
அமெரிக்க வட்டி உயர்வு கேலிக்குரியது: டெய்லர் சமன்பாட்டை மாற்றி அமைத்து ஈரான் சபாநாயகர் கிண்டல்!
Local
18 September 2026
ஈரானில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்கா: ஐ.நா. போர்க் குற்றம் எனச் சாடல்!
Local
18 September 2026
இலங்கை எதிர் இங்கிலாந்து 2 ஆவது இருபதுக்கு 20 போட்டி : இங்கிலாந்துக்கு 146 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
Local
18 September 2026
இங்கிலாந்து எதிர் இலங்கை இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி: இங்கிலாந்து அணி களத்தடுப்பு தேர்வு!
Local
17 September 2026
ஒன்லைன் மூலம் தொடருந்து பயணச்சீட்டுகளைப் பெறும் வசதி அறிமுகம்
Local
17 September 2026
மாலபே பகுதியில் துப்பாக்கி ரவைகள், கைவிலங்கு மீட்பு
Local
17 September 2026