General18 September 2026

சட்டவிரோத வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிக்க உதவிய குடிவரவு திணைக்கள அதிகாரி கைது

குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு சட்டவிரோதமான வெளிநாட்டு கடவுச்சீட்டை தயாரிக்க உதவியதாகக் கூறப்படும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

42 வயதுடைய குறித்த அதிகாரியை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபருக்கு சட்டவிரோதமான வெளிநாட்டு கடவுச்சீட்டை தயாரிப்பதற்கு உதவியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes