எல் நினோ காலநிலைத் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வறட்சியான வானிலை காரணமாக இலங்கையில் 78,000-க்கும் மேற்பட்டோர் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் விவசாயம் உள்ளிட்ட முறைசாரா துறைகளில் ஈடுபட்டுள்ளதால், அவர்களின் வாழ்வாதார இழப்பு தொடர்பில் தலையிடுவதற்கான பொறிமுறை தொழில் அமைச்சிடம் தற்போது இல்லை என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
முறைசார்ந்த துறையில் பணியாற்றுவோர் தற்போதைய வானிலை நிலைமையால் வேலைவாய்ப்பு சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை எனவும், அதேவேளை விவசாயம் உள்ளிட்ட முறைசாரா துறைகளில் ஈடுபட்டுள்ள கணிசமான எண்ணிக்கையிலானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் மூடப்படுவது போன்ற முறைசார்ந்த துறையுடன் தொடர்புடைய வேலைவாய்ப்பு பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில், தொழில் அமைச்சினால் தலையிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், முறைசாரா துறையில் ஏற்பட்டுள்ள வாழ்வாதார இழப்புகளுக்காக தலையிடுவதற்கான தற்போதைய பொறிமுறை அமைச்சிடம் இல்லை எனவும் தொழில் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு உதவுவதற்கான வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஏற்கனவே தயாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Latest News
அமேசன் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை உயிரினம் - மரபணு சோதனையில் வெளியான ஆச்சரியம்
Local
18 September 2026
62 இலட்சம் பெண்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர் - குடும்பப் பொறுப்புக்களே முக்கிய காரணம் என ஆய்வில் தகவல்!
Local
18 September 2026
இங்கிலாந்து அணியுடன் தொடர் தோல்வி: இலங்கை அணியின் பலவீனங்களை உடைத்த சங்கக்கார!
Local
18 September 2026
நாமல் ராஜபக்சவின் விளக்கமறியல் நீடிப்பு!
Local
18 September 2026
உலகளாவிய பொருளாதார அழுத்தம்: அதிரடி முடிவெடுத்த ஜப்பான் வங்கி!
Local
18 September 2026
திலித் ஜயவீரவின் எழுத்தாணை மனு மீதான உத்தரவு எதிர்வரும் 30 ஆம் திகதி
Local
18 September 2026
எல் நினோவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கை கொடுக்குமா அரசாங்கம்? – தொழில் பிரதி அமைச்சர் விளக்கம்!
Local
18 September 2026
ஈராண்டு நிறைவைக் கொண்டாடும் தேசிய மக்கள் சக்தி - அக்குரஸ்ஸவில் மாபெரும் மக்கள் பேரணி!
Local
18 September 2026
நாமல் ராஜபக்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை
Local
18 September 2026
சட்டவிரோத வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிக்க உதவிய குடிவரவு திணைக்கள அதிகாரி கைது
Local
18 September 2026