சென்னை நாரத கான சபாவில், குரு ஸ்ரீ உடுப்பி லக்ஷ்மி நாராயணனின் 100வது ஆண்டு விழாக் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரபல நடனக் கலைஞர் பிரபுதேவா, தனது குருவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பரதநாட்டியம் ஆடினார்.
இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலான நிலையில், பெரும்பாலான எதிர்மறையான கருத்துகளே பதிவிடப்பட்டு வந்தன.
இதனிடையே, பிரபுதேவாவின் நடனத்தை விமர்சித்து நடிகை பிரீத்தி சஞ்சீவ் வெளியிட்டுள்ள பதிவு பேசுபொருளாக மாறியுள்ளது.
அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளதாவது, பிரபுதேவா பரதநாட்டியத்தை முறைப்படி ஆடவில்லை.பாரம்பரிய கலைகளைத் தவறாக ஆடினால், மக்கள் கேள்வி கேட்காமல் தொடர்ந்து பாராட்டுகிறார்கள். பிரபுதேவா போன்ற ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர் இப்படி மன்னிக்க முடியாத தவறைச் செய்வார் என தான் எதிர்பார்க்கவில்லை. இந்த வாய்ப்பை அவருக்குக் கொடுத்ததற்குப் பதிலாக, பரதநாட்டியத்தில் நன்கு பயிற்சி பெற்ற ஓர் இளம் நடனக் கலைஞருக்குக் கொடுத்திருக்கலாம். அது அந்த இளம் கலைஞருக்கு அங்கீகாரமாக இருந்திருக்கும். என குறிப்பிட்டுள்ளார்.
Latest News
தாக்குதலை ஒத்திவைக்க ஈரான் கோரிக்கை - டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு
Local
02 August 2026
ரஷ்ய உணவகத்தில் குண்டுவெடிப்பு - 3 பேர் பலி, 21 பேர் காயம்
Local
02 August 2026
பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு : யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம்!
Local
02 August 2026
விதிகளை மீறி செயற்படும் 129 மதுபானசாலைகள் - தமிழக அரசுக்கு அண்ணாமலை அதிரடி கடிதம்!
Local
02 August 2026
தங்கத்தின் விலையில் மாற்றம்
Local
02 August 2026
பிரபுதேவாவின் பரதநாட்டியம் குறித்துக் கிளம்பிய சர்ச்சை!
Local
02 August 2026
தோல்வியடைந்ததா சமூக ஊடகத் தடை? தடையை மீறும் சிறுவர்கள்
Local
02 August 2026
அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை
Local
02 August 2026
வரலாற்றில் மிக மோசமான எபோலா பரவல் - உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசர அறிவிப்பு!
Local
02 August 2026
தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை - வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட முக்கிய செய்தி!
Local
02 August 2026