Entertainment02 August 2026

பிரபுதேவாவின் பரதநாட்டியம் குறித்துக் கிளம்பிய சர்ச்சை!

சென்னை நாரத கான சபாவில், குரு ஸ்ரீ உடுப்பி லக்ஷ்மி நாராயணனின் 100வது ஆண்டு விழாக் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரபல நடனக் கலைஞர் பிரபுதேவா, தனது குருவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பரதநாட்டியம் ஆடினார்.

இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலான நிலையில், பெரும்பாலான எதிர்மறையான கருத்துகளே பதிவிடப்பட்டு வந்தன.

இதனிடையே, பிரபுதேவாவின் நடனத்தை விமர்சித்து நடிகை பிரீத்தி சஞ்சீவ் வெளியிட்டுள்ள பதிவு பேசுபொருளாக மாறியுள்ளது.

அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளதாவது, பிரபுதேவா பரதநாட்டியத்தை முறைப்படி ஆடவில்லை.பாரம்பரிய கலைகளைத் தவறாக ஆடினால், மக்கள் கேள்வி கேட்காமல் தொடர்ந்து பாராட்டுகிறார்கள். பிரபுதேவா போன்ற ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர் இப்படி மன்னிக்க முடியாத தவறைச் செய்வார் என தான் எதிர்பார்க்கவில்லை. இந்த வாய்ப்பை அவருக்குக் கொடுத்ததற்குப் பதிலாக, பரதநாட்டியத்தில் நன்கு பயிற்சி பெற்ற ஓர் இளம் நடனக் கலைஞருக்குக் கொடுத்திருக்கலாம். அது அந்த இளம் கலைஞருக்கு அங்கீகாரமாக இருந்திருக்கும். என குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes