Entertainment02 August 2026

ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் திடீர் திருப்பம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி தொடர்பான விவாகரத்து வழக்கு தொடர்ந்து கவனம் பெற்றுவரும் நிலையில், ஜீவனாம்சம் தொடர்பாக வெளியான தகவல்களுக்கு ஆர்த்தியின் தாயார் விளக்கம் அளித்துள்ளார்.

சமூக ஊடகங்களில், ஆர்த்தி மாதந்தோறும் ரூ.40 இலட்சம் ஜீவனாம்சம் கோரியதாக தகவல்கள் பரவிய நிலையில், அது தவறான புரிதல் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி ஆர்த்திக்கு மாதம் ரூ.3 இலட்சமும், தம்பதியரின் இரண்டு மகன்களுக்கும் தலா ரூ.1 இலட்சம் வீதம் மாதந்தோறும் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, மொத்தம் மாதம் ரூ.5 இலட்சம் வழங்கப்பட வேண்டும் என்றார்.

மேலும், அமெரிக்க பாடத்திட்டத்தில் கல்வி கற்கும் இரண்டு மகன்களின் ஆண்டு பாடசாலை கட்டணமாக சுமார் ரூ.86 இலட்சம் செலவாகும் என்றும், அந்தக் கட்டணத்தையும் ரவி மோகன் ஏற்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதுமட்டுமன்றி, குழந்தைகளின் கராத்தே, சதுரங்கம், நடனம் உள்ளிட்ட இணைப் பாடத்திட்ட (Extracurricular) பயிற்சிகளுக்கான செலவுகளையும் ரவி மோகன் வழங்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த அனைத்து செலவுகளையும் சேர்த்தே ரூ.40 இலட்சம் என்ற தொகை குறிப்பிடப்பட்டதாகவும், அது மாதாந்திர ஜீவனாம்ச கோரிக்கையாக அல்ல என்றும் ஆர்த்தியின் தாயார் விளக்கம் அளித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes