Entertainment03 August 2026

திருவண்ணாமலையில் மகன்களுடன் தனுஷ் : 'ஓம்' படப்பிடிப்பிற்கு இடையே நடந்தது என்ன?

நடிகர் தனுஷ், தனது இரண்டு மகன்களுடன் திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, கோயிலில் இன்று நடைபெற்ற "கோ" பூஜையிலும் அவர் பக்தியுடன் கலந்து கொண்டு வழிபட்டார். நடிகர் தனுஷை காண ஏராளமான பக்தர்களும் ரசிகர்களும் கோயிலில் திரண்டனர்.

இதற்கிடையில், திருவண்ணாமலையில் கடந்த மூன்று நாட்களாக தனுஷ் நடித்து வரும் 'ஓம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பிற்காக அங்கு தங்கியுள்ள அவர், தனது மகன்களுடன் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes