Entertainment22 August 2026

"என் வாழ்க்கையின் மிகப்பெரிய தூண் அம்மாதான்" – ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி

முதலமைச்சர் விஜய்யின் மகனும், திரைப்பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது குடும்பம் மற்றும் பெற்றோர் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

"என் வாழ்க்கையின் மிகப்பெரிய தூண் என் அம்மாதான். அவர் 24 மணி நேரமும் என்னைப் பற்றியும், என் தங்கையைப் பற்றியும் மட்டுமே சிந்தித்துக்கொண்டிருப்பார்" என்று அவர் கூறியுள்ளார்.

ஒரு நாள் தான் அவர்களிடம் பேசத் தவறிவிட்டால்கூட, உடனடியாக அவரே தொலைபேசியில் அழைத்து, "இன்று என்ன நடந்தது?" என்று தனது நலனை விசாரிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"என் அம்மா மற்றும் அப்பாவிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள எனக்குச் சற்று பயமாக இருக்கும். ஆனால், என் தங்கையிடம் நான் எதையும் மறைக்காமல் பேசுவேன், அவளிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வேன்" என்று தனது தங்கையுடனான நெருக்கமான உறவு குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes