Sports02 August 2026

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஜஸ்ப்ரீத் பும்ரா விலகல்!

இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த டெஸ்ட் தொடருக்கு, பும்ரா உடற்தகுதி பெறுவார் என்ற அடிப்படையில் அணிக்குத் தேர்வாகியிருந்தார்.

எனினும், பெங்களூருவில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், பும்ராவின் இடது முழங்காலில் தொடர்ந்து அசௌகரியம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவரை அவசரப்பட்டு மீண்டும் களமிறக்குவது பாதுகாப்பானது அல்ல என்பதால், முழுமையாகக் குணமடையும் வரை ஓய்வெடுக்க இந்திய கிரிக்கெட் சபையின் மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த பும்ரா விலகியுள்ளதைத் தொடர்ந்து, அஜிட் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு விரைவிலேயே அவருக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes