Sports04 August 2026

சென்னையில் அதிவேக உந்துருளியில் சீறிப்பாய்ந்த மகேந்திர சிங் தோனி: வைரலாகும் காணொளி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேந்திர சிங் தோனி, சென்னை இருங்காட்டுக்கோட்டையிலுள்ள மெட்ராஸ் சர்வதேச பந்தய களத்தில் (Madras International Circuit) அதிவேகமாக உந்துருளியை ஓட்டிச் சென்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த நாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விளம்பர நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக நேற்று சென்னை வந்தடைந்த தோனி, ரேசிங் மைதானத்தில் அந்த நிறுவனத்தின் புதிய சில்லுகளைப் பரிசோதிக்கும் வகையில் அதிவேகமாக உந்துருளியை இயக்கியுள்ளார்.

பந்தய களத்தில் சுற்றுகளை நிறைவு செய்து 'பிட் லேன்' (pit lane) பகுதிக்கு திரும்பிய தோனி, தனது தலைக்கவசத்தைக் கழற்றி அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களைப் பார்த்து கையசைத்து வாழ்த்து தெரிவித்தார்.

ஐ.பி.எல் போட்டிகளுக்குப் பிறகு அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டு வரும் தோனி, தனது மோட்டார் சைக்கிள் ஆர்வத்தின் காரணமாக இந்த நிகழ்வில் உற்சாகத்துடன் பங்கேற்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் சமீபத்தில் பதவியிலிருந்து விலகிய நிலையில், 2027ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் தோனி தொடர்ந்து விளையாடுவாரா என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே மீண்டும் அதிகரித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes