இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்கவின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டமை தொடர்பான நீண்டகால சட்டச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், அவருக்கு 164,000 அமெரிக்க டொலர்களை (சுமார் 5.5 கோடி ரூபாய்) இழப்பீடாக வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் (SLC) நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.
இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்டதனை அடுத்து, சுவிட்சர்லாந்திலுள்ள விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை மீளப் பெற ஹதுருசிங்க ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒப்பந்தம் முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, ஆரம்பத்தில் ஹதுருசிங்க 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாகக் கோரியிருந்தார்.
எனினும், விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் திட்டமிட்டபடி முன்னேறாத நிலையில், அவர் சுமார் 450,000 அமெரிக்க டொலர்களைக் கோரி புதிய சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்தார்.
இதனையடுத்து எட்டப்பட்ட சமரச உடன்பாட்டின்படி, அவரது வரிப் பொறுப்பில் 50 சதவீதப் பங்கையும் உள்ளடக்கி மொத்தம் 200,000 அமெரிக்க டொலர்களைப் பெற உடன்பாடு எட்டப்பட்டது.
இதில் 164,000 அமெரிக்க டொலர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் செலுத்தி வழக்கினை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இலங்கையின் தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்ட ஹதுருசிங்கவின் காலத்தில், இலங்கை அணி விளையாடிய 67 சர்வதேச போட்டிகளில் 24 போட்டிகளில் வெற்றியையும், 38 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்தது.
அத்துடன், அவரது பதவிக் காலத்தில் ஒழுக்கமின்மை சார்ந்த குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. தனிநபர் விசாரணை அதிகாரி நடத்திய விசாரணையில், அணிக்குள் சீர்குலைவை ஏற்படுத்தியமை மற்றும் வீரர்களைப் போதியளவு தயார்படுத்தத் தவறியமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பானவராக காணப்பட்டார்.
இந்தப் பிரச்சினை காரணமாக அதிகளவிலான சட்டச் செலவுகள் ஏற்பட்ட நிலையில், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழுவும் (கோப்) இதில் தலையிட்டு, கூடுதல் செலவினங்களைத் தவிர்க்கும் பொருட்டு இரு தரப்பும் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசத் தீர்வைக் காணுமாறு பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்டதனை அடுத்து, சுவிட்சர்லாந்திலுள்ள விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை மீளப் பெற ஹதுருசிங்க ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒப்பந்தம் முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, ஆரம்பத்தில் ஹதுருசிங்க 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாகக் கோரியிருந்தார்.
எனினும், விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் திட்டமிட்டபடி முன்னேறாத நிலையில், அவர் சுமார் 450,000 அமெரிக்க டொலர்களைக் கோரி புதிய சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்தார்.
இதனையடுத்து எட்டப்பட்ட சமரச உடன்பாட்டின்படி, அவரது வரிப் பொறுப்பில் 50 சதவீதப் பங்கையும் உள்ளடக்கி மொத்தம் 200,000 அமெரிக்க டொலர்களைப் பெற உடன்பாடு எட்டப்பட்டது.
இதில் 164,000 அமெரிக்க டொலர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் செலுத்தி வழக்கினை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இலங்கையின் தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்ட ஹதுருசிங்கவின் காலத்தில், இலங்கை அணி விளையாடிய 67 சர்வதேச போட்டிகளில் 24 போட்டிகளில் வெற்றியையும், 38 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்தது.
அத்துடன், அவரது பதவிக் காலத்தில் ஒழுக்கமின்மை சார்ந்த குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. தனிநபர் விசாரணை அதிகாரி நடத்திய விசாரணையில், அணிக்குள் சீர்குலைவை ஏற்படுத்தியமை மற்றும் வீரர்களைப் போதியளவு தயார்படுத்தத் தவறியமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பானவராக காணப்பட்டார்.
இந்தப் பிரச்சினை காரணமாக அதிகளவிலான சட்டச் செலவுகள் ஏற்பட்ட நிலையில், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழுவும் (கோப்) இதில் தலையிட்டு, கூடுதல் செலவினங்களைத் தவிர்க்கும் பொருட்டு இரு தரப்பும் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசத் தீர்வைக் காணுமாறு பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
இலங்கையில் அதிகரிக்கும் யானைகளின் மரணங்கள்: சுற்றாடல் அமைச்சு எச்சரிக்கை!
Local
12 August 2026
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிக்க வேண்டாம் - மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை
Local
12 August 2026
இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு
Local
12 August 2026
திருமணத்திற்கு முன்பே பிரிவா? திருமணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்த சாரா டெண்டுல்கர்
Local
12 August 2026
இன்று இரவு நிகழும் அரிய முழு சூரிய கிரகணம் : பகல் நேரத்திலேயே இருளும் வானம் - 121 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அதிசயம்!
Local
12 August 2026
ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’: தமன் இசையில் 'அய்யய்யோ அம்மாடி' பாடலை வெளியிடுகிறார் யுவன்!
Local
12 August 2026
தங்கப் பிரியர்களுக்கு இன்றைய செய்தி : மீண்டும் உச்சத்தில் தொடரும் தங்கத்தின் விலை!
Local
12 August 2026
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு
Local
12 August 2026
இரண்டு மணி நேர விசாரணைக்குப் பின்னர் CIDயிலிருந்து வெளியேறினார் யோஷித
Local
12 August 2026
தனுஷ் அரசியலுக்கு வந்தால் வாழ்த்துகள் ஆனால் தமிழ் சினிமா சிறந்த நடிகரை இழக்கும் - விஷால் உருக்கம்!
Local
12 August 2026