இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்கவின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டமை தொடர்பான நீண்டகால சட்டச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், அவருக்கு 164,000 அமெரிக்க டொலர்களை (சுமார் 5.5 கோடி ரூபாய்) இழப்பீடாக வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் (SLC) நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.
இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்டதனை அடுத்து, சுவிட்சர்லாந்திலுள்ள விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை மீளப் பெற ஹதுருசிங்க ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒப்பந்தம் முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, ஆரம்பத்தில் ஹதுருசிங்க 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாகக் கோரியிருந்தார்.
எனினும், விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் திட்டமிட்டபடி முன்னேறாத நிலையில், அவர் சுமார் 450,000 அமெரிக்க டொலர்களைக் கோரி புதிய சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்தார்.
இதனையடுத்து எட்டப்பட்ட சமரச உடன்பாட்டின்படி, அவரது வரிப் பொறுப்பில் 50 சதவீதப் பங்கையும் உள்ளடக்கி மொத்தம் 200,000 அமெரிக்க டொலர்களைப் பெற உடன்பாடு எட்டப்பட்டது.
இதில் 164,000 அமெரிக்க டொலர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் செலுத்தி வழக்கினை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இலங்கையின் தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்ட ஹதுருசிங்கவின் காலத்தில், இலங்கை அணி விளையாடிய 67 சர்வதேச போட்டிகளில் 24 போட்டிகளில் வெற்றியையும், 38 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்தது.
அத்துடன், அவரது பதவிக் காலத்தில் ஒழுக்கமின்மை சார்ந்த குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. தனிநபர் விசாரணை அதிகாரி நடத்திய விசாரணையில், அணிக்குள் சீர்குலைவை ஏற்படுத்தியமை மற்றும் வீரர்களைப் போதியளவு தயார்படுத்தத் தவறியமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பானவராக காணப்பட்டார்.
இந்தப் பிரச்சினை காரணமாக அதிகளவிலான சட்டச் செலவுகள் ஏற்பட்ட நிலையில், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழுவும் (கோப்) இதில் தலையிட்டு, கூடுதல் செலவினங்களைத் தவிர்க்கும் பொருட்டு இரு தரப்பும் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசத் தீர்வைக் காணுமாறு பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்டதனை அடுத்து, சுவிட்சர்லாந்திலுள்ள விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை மீளப் பெற ஹதுருசிங்க ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒப்பந்தம் முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, ஆரம்பத்தில் ஹதுருசிங்க 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாகக் கோரியிருந்தார்.
எனினும், விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் திட்டமிட்டபடி முன்னேறாத நிலையில், அவர் சுமார் 450,000 அமெரிக்க டொலர்களைக் கோரி புதிய சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்தார்.
இதனையடுத்து எட்டப்பட்ட சமரச உடன்பாட்டின்படி, அவரது வரிப் பொறுப்பில் 50 சதவீதப் பங்கையும் உள்ளடக்கி மொத்தம் 200,000 அமெரிக்க டொலர்களைப் பெற உடன்பாடு எட்டப்பட்டது.
இதில் 164,000 அமெரிக்க டொலர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் செலுத்தி வழக்கினை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இலங்கையின் தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்ட ஹதுருசிங்கவின் காலத்தில், இலங்கை அணி விளையாடிய 67 சர்வதேச போட்டிகளில் 24 போட்டிகளில் வெற்றியையும், 38 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்தது.
அத்துடன், அவரது பதவிக் காலத்தில் ஒழுக்கமின்மை சார்ந்த குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. தனிநபர் விசாரணை அதிகாரி நடத்திய விசாரணையில், அணிக்குள் சீர்குலைவை ஏற்படுத்தியமை மற்றும் வீரர்களைப் போதியளவு தயார்படுத்தத் தவறியமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பானவராக காணப்பட்டார்.
இந்தப் பிரச்சினை காரணமாக அதிகளவிலான சட்டச் செலவுகள் ஏற்பட்ட நிலையில், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழுவும் (கோப்) இதில் தலையிட்டு, கூடுதல் செலவினங்களைத் தவிர்க்கும் பொருட்டு இரு தரப்பும் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசத் தீர்வைக் காணுமாறு பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
கைது செய்யப்பட்ட"ஷிரான் பாசிக்" என்பவருக்கு 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவு
Local
15 August 2026
இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி: நாணயசுழற்சியில் இந்திய அணி வெற்றி
Local
15 August 2026
காலி மைதானத்தில் தேசியக் கொடியேற்றிய இந்திய கிரிக்கெட் அணி
Local
15 August 2026
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடி ஏற்றினார்!
Local
15 August 2026
இலங்கை – இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று
Local
15 August 2026
பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை: காவல்துறை அதிரடி உத்தரவு!
Local
15 August 2026
விஜய் தலைமையிலான சுதந்திர தின விழாவில் முதல் வரிசையில் வந்து அமர்ந்த நடிகை திரிஷா
Local
15 August 2026
வழமைக்குத் திரும்பியது ஹட்டன் - கொழும்பு பிரதான வீதிப் போக்குவரத்து
Local
15 August 2026
சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த தகவல்களைத் திரட்டிய நபர் கைது
Local
15 August 2026
மத்திய கிழக்கு பதற்றம்: அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை மற்றும் ஹிஸ்புல்லாவின் எதிர்ப்பு
Local
15 August 2026