Sports18 August 2026

ஃபிஃபாவின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி பதவி விலகினார்!

உலகக் கால்பந்து அமைப்பான ஃபிஃபாவின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி (Chief Operating Officer) கெவின் லமூர் (Kevin Lamour) தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இதன்படி, 2026 ஆகஸ்ட் 17 அன்று கெவின் லமூர் மற்றும் ஃபிஃபாவுடனான பணி உறவு முடிவுக்கு வந்துள்ளதாக ஃபிஃபா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

அவரது இரண்டு ஆண்டு சேவைக்கு நன்றி தெரிவித்துள்ள ஃபிஃபா, வேறு கருத்துக்கள் எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டது.

ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ (Gianni Infantino), உலகக் கிண்ணபோட்டித் தொடர்களின் வணிகப் பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்கும் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான திட்டத்திற்குத் திட்டமிட்டிருந்தார்.

இந்தத் திட்டத்திற்கு எதிராக கெவின் லமூர் பகிரங்கமாக குரல் கொடுத்தார்.

"ஃபிஃபா ஊழியர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்" என்றும், இது "ஒரு தனிநபரின் நலனுக்கான திட்டம்" என்றும் அவர் சாடியிருந்தார்.

லமூரின் விமர்சனங்களுக்கு சில மணி நேரத்திற்கு முன்பு, இன்ஃபான்டினோவின் மூத்த ஆலோசகரான கார்லோஸ் கார்டிரோவும் (Carlos Cordeiro) இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியில் இருந்து விலகினார்.

இந்தநிலையில், நிர்வாகிகள், கால்பந்து கூட்டமைப்புகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்தே,உலகக் கிண்ணப் பங்குகளை விற்கும் இந்த சர்ச்சைக்குரிய திட்டத்தை ஃபிஃபா கைவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes