General06 May 2026

தமிழ்நாட்டின் புதிய அத்தியாயம் - விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் இந்த வெற்றியை ஒரு "குறிப்பிடத்தக்க சாதனை" என்று அவர் விவரித்துள்ளார்.

“தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்ட மற்றும் சுமூகமான தொடர்பை நான் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன். உங்கள் நிர்வாகத்தின் கீழ் நமது நட்பு ரீதியான உறவு தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று சந்திரிகா குமாரதுங்க தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



Related recommendation
Hiru TV News | Programmes