யாழ்ப்பாணம் செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியை பார்வையிட நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார உள்ளிட்ட குழுவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, நீதியமைச்சர் தலைமையிலான குழுவினர் இன்று (19) மாலை சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வு தொடர்பில் பார்வையிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் பிரதிநிதிகளும் இன்று சித்துப்பாத்தி மனித புதைகுழி அமைந்துள்ள பகுதிக்கு கள விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளானது, குற்றவியல் வழக்கு விசாரணையின் ஒரு கட்டமாக முன்னெடுக்கப்படுவதால், நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்படுவோரை தவிர ஏனையவர்களுக்கு செல்ல முடியாது.
அதற்கமையவே, நீதிமன்றத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாண நீதவான், குறித்தக் குழுவினருக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்று 29 நாளுக்கான அகழ்வுப் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதுவரையான அகழ்வுப் பணிகளின் போது 387 என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ள நிலையில், அவற்றிலிருந்து 367 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, நீதியமைச்சர் தலைமையிலான குழுவினர் இன்று (19) மாலை சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வு தொடர்பில் பார்வையிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் பிரதிநிதிகளும் இன்று சித்துப்பாத்தி மனித புதைகுழி அமைந்துள்ள பகுதிக்கு கள விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளானது, குற்றவியல் வழக்கு விசாரணையின் ஒரு கட்டமாக முன்னெடுக்கப்படுவதால், நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்படுவோரை தவிர ஏனையவர்களுக்கு செல்ல முடியாது.
அதற்கமையவே, நீதிமன்றத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாண நீதவான், குறித்தக் குழுவினருக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்று 29 நாளுக்கான அகழ்வுப் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதுவரையான அகழ்வுப் பணிகளின் போது 387 என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ள நிலையில், அவற்றிலிருந்து 367 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
Latest News
இறக்குமதி கொடுப்பனவுகளுக்கு புதிய விதிமுறைகள் இன்று முதல் வர்த்தமானி அமுல்!
Local
19 June 2026
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை கைது செய்ய நீல, சிவப்பு அறிவிப்புகள் - அமைச்சர் ஆனந்த விஜேபால!
Local
19 June 2026
மஹர, கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு
Local
19 June 2026
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா? பிரதி அமைச்சர் விளக்கம்
Local
19 June 2026
தென் கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி வெற்றி
Local
19 June 2026
நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார உள்ளிட்ட குழுவினர் இன்று சித்துப்பாத்தி மனித புதைகுழிக்கு கள விஜயம்!
Local
19 June 2026
காங்கேசன்துறை தங்கம் கடத்தல் விவகாரம் - 8 பேரை சுங்கத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி!
Local
19 June 2026
தலவத்துகொட பகுதியில் இயங்கிய 9 பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகை - 43 பேர் கைது
Local
19 June 2026
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்
Local
19 June 2026
ஈரானுக்கு எதிரான கடற்படை முற்றுகையை அமெரிக்கா நீக்கியது: ஈரானிய உச்சத் தலைவரின் கருத்தும் வெளியானது!
Local
19 June 2026