இலங்கைக்கு மிக அருகில் உள்ள தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் காவல்துறை சோதனைச் சாவடிகள் கைவிடப்பட்டுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத ஊடுருவல்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளமை குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் வரையான தூரம் சுமார் 38 கிலோமீற்றர் மாத்திரமாகும்.இதில் தனுஷ்கோடியில் இருந்து 11 கிலோமீற்றர் தொலைவில் உள்ள 6ஆம் மணல் திட்டையுடன் இந்திய எல்லை முடிவடைகிறது.
இந்த குறுகிய கடல் எல்லைப் பகுதி வழியாக இருநாட்டு கடத்தல்காரர்களும் தடையின்றி ஊடுருவும் சூழல் காணப்படுவதாக எச்சரிக்கப்படுகிறது.
முன்னதாக, கடலோரப் பாதுகாப்பைப் பலப்படுத்த பாம்பன் பாலம், ராமேஸ்வரம் ஓலைக்குடா, வேர்க்கோடு மற்றும் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் ஆகிய பகுதிகளில் காவல்துறை சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டன.
எனினும், கடந்த ஐந்து ஆண்டுகாலத்தில் போதிய காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்படாததால் இந்த கண்காணிப்புப் பணிகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது தனுஷ்கோடியில் காவல்துறையினர் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஓய்வறை உடைந்து கிடப்பதுடன், ஒரு காவல்துறை அதிகாரி கூட பணியில் இல்லை எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதன் காரணமாக கடல் வழியிலான கடத்தல்களும் ஊடுருவல்களும் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் தற்போது பதவியேற்றுள்ள அரசாங்கம் இந்த சோதனைச் சாவடிகளுக்கு உடனடியாக காவல்துறையினரை நியமித்து கடலோரப் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் வரையான தூரம் சுமார் 38 கிலோமீற்றர் மாத்திரமாகும்.இதில் தனுஷ்கோடியில் இருந்து 11 கிலோமீற்றர் தொலைவில் உள்ள 6ஆம் மணல் திட்டையுடன் இந்திய எல்லை முடிவடைகிறது.
இந்த குறுகிய கடல் எல்லைப் பகுதி வழியாக இருநாட்டு கடத்தல்காரர்களும் தடையின்றி ஊடுருவும் சூழல் காணப்படுவதாக எச்சரிக்கப்படுகிறது.
முன்னதாக, கடலோரப் பாதுகாப்பைப் பலப்படுத்த பாம்பன் பாலம், ராமேஸ்வரம் ஓலைக்குடா, வேர்க்கோடு மற்றும் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் ஆகிய பகுதிகளில் காவல்துறை சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டன.
எனினும், கடந்த ஐந்து ஆண்டுகாலத்தில் போதிய காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்படாததால் இந்த கண்காணிப்புப் பணிகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது தனுஷ்கோடியில் காவல்துறையினர் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஓய்வறை உடைந்து கிடப்பதுடன், ஒரு காவல்துறை அதிகாரி கூட பணியில் இல்லை எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதன் காரணமாக கடல் வழியிலான கடத்தல்களும் ஊடுருவல்களும் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் தற்போது பதவியேற்றுள்ள அரசாங்கம் இந்த சோதனைச் சாவடிகளுக்கு உடனடியாக காவல்துறையினரை நியமித்து கடலோரப் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Latest News
அமெரிக்க - ஈரான் முதல் நாள் பேச்சுவார்த்தை நிறைவு!
Local
22 June 2026
உருகுவே - கேப் வேர்ட் இடையிலான போட்டி சமநிலையில் நிறைவு
Local
22 June 2026
இலங்கை - தமிழக கடல்வழியில் ஊடுருவல் அபாயம்!
Local
22 June 2026
ஐ.நா. சித்திரவதைத் தடுப்பு உபகுழுவின் முதற்கட்ட இரகசிய அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட உள்ளது
Local
22 June 2026
”ஒவ்வொரு லீற்றர் டீசலிலும் அநுரகுமார 98 ரூபாய் திருடுகிறார்" - சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு
Local
22 June 2026
ஈரான் - பெல்ஜியம் மோதிய போட்டி சமநிலையில் நிறைவு!
Local
22 June 2026
அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கியது இஸ்ரேல்!
Local
22 June 2026
பேருந்து கட்டணம் அடுத்த மாதம் திருத்தப்படுமா?
Local
22 June 2026
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் முன்னுரிமை அடிப்படையில் தீர்வு - அரசாங்கம் உறுதி!
Local
22 June 2026
“டெங்கு ஒழிப்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது!”
Local
22 June 2026